தமிழ் வீட்டு திருமணத்திற்கு வரும் சரஸ்வதி, உடன் வரும் அருள் – இன்றைய “தமிழும் சரஸ்வதியும்” எபிசோட்!
விஜய் டிவி “தமிழும் சரஸ்வதியும்” சீரியலில், கல்யாண வீட்டில் கோதை ஒருவரை திட்ட என்ன நடந்தது என சந்திரலேகா கேட்கிறார். கோதைக்கு பொய் சொன்னால் பிடிக்காது என கோதை கணவர் சொல்கிறார்.
தமிழும் சரஸ்வதியும்:
இன்று “தமிழும் சரஸ்வதியும்” சீரியலில், திருமணத்திற்கு வந்த ஒருவரை கோதை பயங்கரமாக திட்டிக் கொண்டிருக்க, என்ன நடந்தது என சந்திரலேகா கேட்கிறார். இவர் எங்களது பேக்டரியில் வேலை செய்தவர் ஒரு நாள் பணத்தை திருடி விட்டான். அதனால் வேலையை விட்டு அனுப்பி விட்டோம். அப்பறம் எதற்கு திருமணத்திற்கு கூப்பிட்டிங்க என கேட்க, அவர் தான் அப்படி செய்தார். அவரது மனைவி இல்லை எனவே அவங்களுக்கு வேலை போட்டு கொடுத்து விட்டோம் என சொல்கிறார்.
உடனே கோதை அவரை பயங்கரமாக திட்டி அனுப்பி விடுகிறார். மறுபக்கம் சரஸ்வதியின் அம்மா அப்பா வேலைக்கு செல்ல, பாட்டி தனியாக இருந்து விடுவார்களா என கேட்கிறார். சரஸ்வதி எப்படி கல்யாணத்திற்கு போகலாம் என நினைக்க, பாட்டி அதற்காக பிளான் பண்ணுகிறார். கல்யாண மண்டபத்தில் வேலைகள் நடக்க, சரஸ்வதியும் அணுவும் காரில் வருகின்றனர். அவர் தமிழிற்கு மெசேஜ் பண்ண, மாப்பிள்ளை பொண்ணு பெயரை மறைக்க வேண்டும் என சொல்கின்றனர்.
மண்டபம் வந்து விட்டது என சொல்ல, அருளிடம் இருந்து எப்படி தப்பிப்பது என தெரியாமல் இருக்க அங்கே அருள் பொண்ணு மாப்பிள்ளை பெயரை மறைத்து வைத்திருக்காங்க என கேட்கிறார். சரஸ்வதி கல்யாணத்திற்கு வந்ததும் தமிழ் மறைந்து நின்று பார்க்கிறார். அருள் ஏன் அங்கேயே நிற்கிறாய் உள்ளே வா என கூப்பிடுகிறார். பின் நீ வந்ததில் மிகவும் சந்தோசம் என சொல்கிறார். அருள் சந்தேகத்துடன் இருக்க, தமிழிடம் வந்து சரஸ்வதி அருள் வேற வந்திருக்கான் என சொல்கிறார்.
தமிழும் சரஸ்வதியும் சந்தோசமாக பேசிக் கொண்டிருக்க, அப்போது அருள் அப்பா போன் செய்து என்ன பண்ணிட்டு இருக்கீங்க என கேட்கிறார். அப்போது அருண் வெளியே வர அணு மட்டும் இருக்கிறார். அக்கா எங்கே இருக்கிறார் என கேட்க, பெண்ணுடன் இருக்கிறார் என அணு சொல்கிறார். அருள் சத்தம் கேட்டு தமிழை சரஸ்வதி மறைய சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.