குடித்துவிட்டு ஜெனி வீட்டில் பிரச்சனை செய்யும் செழியன், வருத்தப்படும் பாக்கியா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், செழியன் குடித்துவிட்டு ஜெனி வீட்டிற்கு சென்று அவரை வர சொல்லி அழைக்கிறார். செழியனை பார்த்து பாக்கியா வருத்தப்பட்டு கோபியிடம் சொல்கிறார்.
பாக்கியலட்சுமி:
இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், செழியன் குடித்துவிட்டு ஜெனி வீட்டிற்கு வருகிறார். அப்போது ஜெனியை அனுப்பாததால் தான் குடித்தேன் என சொல்ல, ஜெனியை என்னுடன் அனுப்பி வைக்க வேண்டும் என சொல்கிறார். பின் செழியன் ஜெனி வரவில்லை என்றால் ரோட்டில் நின்று சண்டை போடுவேன் என சொல்கிறார். ஜெனி வா என கையை பிடித்து இழுக்க, ஜெனியின் அப்பா செழியனை வீட்டை விட்டு வெளியே அனுப்புகிறார். உடனே செழியன் கோவமாக இங்கேயே இரு என சொல்லிவிட்டு கிளம்புகிறார்.
பின் பாக்கியா செழியன் இன்னும் வரவில்லை என நினைக்க, செழியன் குடித்துவிட்டு வருகிறார். பாக்கியா என்னாச்சு என கேட்க, ஜெனி ஞாபகமாக இருந்தது அதனால் தான் குடித்தேன். ஆனால் குடித்ததும் அவனை ரொம்ப பார்க்கணும் போல இருந்தது அதான் அவங்க வீட்டிற்கு போனேன் என சொல்கிறார். செழியன் ஜெனியை பற்றி புலம்பிக் கொண்டிருக்க, எழில் வருகிறார். செழியனை பார்த்து என்னாச்சு இப்படி ஏன் குடித்திருக்க என கேட்கிறார்.
கயலை கவனிக்காமல் இருக்கும் தனம், கோவத்தில் சண்டையிடும் மீனா – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!
இதோடு சேர்ந்து ஜெனி வீட்டிற்கு சென்று சண்டை போட்டிருக்கான் என சொல்ல, எழில் என்னிடம் சொல்லிருக்கலாம் நாம பேசிருப்போம் என சொல்கிறார். உனக்கு என் மீது அக்கறை இல்லை என சொல்ல, எழில் செழியனை தூக்கிக் கொண்டு சென்று படுக்க வைக்கிறார். பாக்கியா செழியனை நினைத்து வருத்தப்படம் ஜெனி இங்கே இருக்கும் வரை ஒரு ஆளாக கூட மதிக்கவில்லை ஆனால் இப்போது இப்படி செய்கிறான் என சொல்கின்றனர்.
இவன் ஏன் இப்படி செய்கிறான் என சொல்ல, எழில் எல்லாம் சரி ஆகிவிடும் என சொல்கிறார். பாக்கியா கோபியிடம் சென்று செழியன் பற்றி சொல்கிறார். அவன் குடித்துவிட்டு வந்திருக்கான் என சொல்ல, அவன் பேசுற நிலைமையில் இல்லை என சொல்கிறார். ஏன் இப்படி செய்கிறான் என கேட்க, ஜெனி இவன் மீது வருத்தமாக இருக்கிறாள் என கேட்கிறான். எல்லாம் நினைத்தது போல நடக்க வேண்டும் என நினைக்கிறான். இவன் ஜெனி வீட்டிற்கு குடித்துவிட்டு போயிருக்கான் அந்த வீட்டில் இவனை பற்றி என்ன நினைப்பார்கள் என கேட்கிறார்.
நீ கவலை படாதே பாக்கியா என கோபி ஆறுதல் சொல்ல, மறுநாள் செழியன் பாக்கியாவுடன் மன்னிப்பு கேட்கிறார். பாட்டி தாத்தா செழியனிடம் என்னாச்சு என கேட்க, ஜெனி வீட்டிற்கு போனான் அதான் இப்படி சோகமாக இருக்கிறான் என சொல்கின்றனர். பாட்டி நீ ஏன் அங்கே போனாய் என கேட்கிறார். ஜெனி நீ போகும் போது எங்கே இருந்தால் என கேட்க, போன் பண்ணி கொடு என சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.