தமிழகத்தில் அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு – நவ.8 நேர்முகத் தேர்வு!
தமிழகத்தில் அஞ்சல் துறையில் அஞ்சல் ஆயுள் காப்பீடு, கிராமிய அஞ்சல் காப்பீடு திட்டங்களின் கீழ் காலியாக உள்ள முகவர் பணியிடங்களை நிரப்ப முடிவு செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு:
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருவதை தொடர்ந்து பல்வேறு அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான போட்டித்தேர்வு அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மத்திய அரசின் கீழ் அஞ்சல் துறையில் அஞ்சல் ஆயுள் காப்பீடு (பிஎல்ஐ) மற்றும் கிராமிய அஞ்சல் காப்பீடு (ஆர்பிஎல்ஐ) என இரண்டு திட்டங்கள் மத்திய, மாநில அரசு ஊழியர்கள் மற்றும் அனைத்து கிராமப்புற மக்கள் என அனைவருக்கும் பயனளிக்கும் விதமாக அமல்படுத்தப்பட்டுள்ளது.
OLA Electric Scooter முன்பதிவு டிசம்பர் 16 முதல் மீண்டும் துவக்கம் – விலை, சிறப்பம்சங்கள்!
இந்த திட்டம் அனைவருக்குமான பாதுகாப்பு மிக்க சிறந்த சேமிப்பு திட்டமாகும். இந்த திட்டத்தின் மூலம் நடப்பு ஆண்டில் புதிய பாலிசிகளை சேர்ப்பதற்கு அனைத்து அஞ்சல் துறையில் முகவர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். அதன் அடைப்படையில் தற்போது இந்த காலிப்பணியிடங்களுக்கான ஈரோடு அஞ்சல் கோட்டத்தில் வரும் நவம்பர் 8ம் தேதி நேர்முகத்தேர்வு நடைபெற இருக்கிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வயது சான்றிதழ், கல்வி சான்றிதழ், பான் கார்டு நகல், ஆதார் நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் ஈரோடு அஞ்சல் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டும்.
தமிழகத்தில் பள்ளிகளுக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை – மாணவர்கள் குஷி! தீபாவளி கொண்டாட்டம்!
இந்த வேலைக்கு கல்வித்தகுதி 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் என்று கூறப்பட்டுள்ளது. 18 முதல் 50 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆயுள் காப்பீட்டு முன்னாள் முகவர், முன்னாள் இராணுவத்தினர், அங்கன்வாடி ஊழியர்கள், முன்னாள் ஆசிரியர்கள், சுயதொழில் செய்பவர்கள், வேலை தேடும் இளைஞர்கள் என அனைவரும் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விபரங்களுக்கு 0424-2258066 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
I like job