தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு? வலுக்கும் கோரிக்கை!
தமிழகத்தில் நவம்பர் 1ம் தேதி முதல் 1 – 8 வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவித்துள்ள நிலையில், பல்வேறு தரப்பில் இருந்தும் பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க கோரிக்கைகள் எழுந்து வருகிறது.
பள்ளிகள் திறப்பு:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் குறைந்துள்ள நிலையில் கடந்த மாதம் 1ம் தேதி முதல் 9 – 12 வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அடுத்த கட்டமாக 1 – 8 வரையிலான வகுப்புகளுக்கு நவம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் முன்னேற்பாடு பணிகளை விரைவாக மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளி வளாகத்தை தூய்மைபடுத்துதல், வகுப்பறைகளை சுத்தம் செய்தல் போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் சனிக்கிழமை (அக்.30) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
ஒரு புறம் மாணவர்களின் கல்வி நிலையை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறக்க ஆதரவு இருந்தாலும் மற்றொரு புறம் எதிர்ப்புகளும் வலுத்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவல் இன்னும் முழுமையாக குறையாத நிலையில் பள்ளிகள் திறப்பு பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்படாததால் பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என்று அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் தீபாவளி பண்டிகை வரவுள்ளதால் இந்த நேரத்தில் பொது இடங்களில் மக்கள் அதிகம் இருக்கும் காரணத்தால் கொரோனா தீவிரமாக பரவ வாய்ப்புள்ளது.
தமிழகத்தின் இத்துறை தொழிலாளர்களுக்கு 15% தீபாவளி போனஸ் – ஜாக்பாட் அறிவிப்பு!
பள்ளிகள் திறக்கப்பட்டு 3 நாட்களிலேயே பண்டிகைக்கு விடுமுறை அளிக்க வேண்டி வரும். அடுத்ததாக மழைக்காலம் தொடங்கி விட்டது. இந்த நேரத்தில் குழந்தைகளுக்கு காலநிலை மாற்றத்தால் சளி, இருமல் போன்ற பாதிப்புகள் ஏற்படும். அதனால் பள்ளிகள் திறப்பை சிறிது காலம் தள்ளி வைக்க வேண்டும் என்று பெற்றோர்கள், பள்ளி ஆசிரியர்கள், பல அரசியல் கட்சியினர் அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்த காரணங்களால் தமிழகத்தில் 1 – 8 வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு தள்ளிப்போக வாய்ப்புள்ளது என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.