தமிழகத்தின் இத்துறை தொழிலாளர்களுக்கு 15% தீபாவளி போனஸ் – ஜாக்பாட் அறிவிப்பு!

0
தமிழகத்தின் இத்துறை தொழிலாளர்களுக்கு 15% தீபாவளி போனஸ் - ஜாக்பாட் அறிவிப்பு!
தமிழகத்தின் இத்துறை தொழிலாளர்களுக்கு 15% தீபாவளி போனஸ் - ஜாக்பாட் அறிவிப்பு!
தமிழகத்தின் இத்துறை தொழிலாளர்களுக்கு 15% தீபாவளி போனஸ் – ஜாக்பாட் அறிவிப்பு!

தமிழகத்தில் உற்பத்தி துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஒவ்வொரு தீபாவளி பண்டிகைக்கும் போனஸ் தருவது வழக்கமாக இருந்து வருகிறது. அதேபோல் இந்த ஆண்டும் போனஸ் வழங்குவது குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தீபாவளி போனஸ்:

தமிழகத்தில் உற்பத்தி துறையில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் தீபாவளி பண்டிகை முன்னிட்டு போனஸ் வழங்குவது நடைமுறையில் இருந்து வருகிறது. அந்த வகையில் பல்வேறு இடங்களில் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் இருந்து வருகின்றன. அவ்வாறு செயல்படும் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் நலன் கருதியே இந்த போனஸ் முறை அமல்படுத்தப்பட்டது. கடந்த ஆண்டில் கொரோனா பாதிப்பு நிலவியிருந்ததால் பண்டிகை கொண்டாடபடவில்லை. உற்பத்தி நிறுவனங்களும் மூடப்பட்டு இருந்தன. தற்போது கொரோனா பரவல் குறைந்து வருகிறது. அதனால் தீபாவளி பண்டிகைக்கு மக்கள் தயாராகி வருகின்றனர்.

TRB முதுகலை பட்டதாரி ஆசிரியர் வேலைவாய்ப்பு – விண்ணப்பதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

கடந்த ஆண்டு உற்பத்தி நிறுவனங்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டதால் இந்த ஆண்டு போனஸ் கிடைக்குமா என்ற சந்தேகம் ஊழியர்களிடத்தில் இருந்து வந்தது. அதனை தொடர்ந்து தீப்பெட்டி உற்பத்தி தொழிற்சாலை ஊழியர்கள் சங்கள் போனஸ் மற்றும் ஊதிய உயர்வு வழங்குவது குறித்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஆலோசனை முடிவில் தீப்பெட்டி உற்பத்தி ஊழியர்களுக்கு 15% போனஸ் வழங்கப்படும் என்ற செய்தியை அறிவித்தது. தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் பெற்றுள்ள வங்கிக் கடனுக்கான வட்டியை தள்ளுபடி செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் பதவிக்காலம் மேலும் 3 ஆண்டுகள் நீட்டிப்பு – மத்திய அரசு முடிவு!

தமிழ்நாட்டில் கோவில்பட்டி, கழுகுமலை, சிவகாசி, சாத்தூர் சுற்று வட்டாரங்களில் தீப்பெட்டி உற்பத்தி அதிகளவில் நடைபெறுகிறது. அதனால் குளோரைடு, சல்பர் ஆகியவற்றை கொண்டு செல்வதற்கு மாவட்ட ஆட்சியரிடம் சான்று பெறும் முறை நீக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும் மூலப்பொருட்களின் விலை அதிகரித்துள்ளதால் தீப்பெட்டியின் விலை ரூ.2 க்கு விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர் தீபாவளிக்கு பின்னர் ஊதிய உயர்வு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!