TRB முதுகலை பட்டதாரி ஆசிரியர் வேலைவாய்ப்பு – விண்ணப்பதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க ஏதுவாக மென்பொருள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கும் படி அரசாணை ஒன்று வெளியியிடப்பட்டுள்ளது.
டிஆர்பி அறிவிப்பு:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் குறைந்து வந்த நிலையில் அரசு தளர்வுகளை அறிவித்து வருகிறது. இந்த நிலையில் அரசு மேல்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள 2,207 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப கோரிக்கைகள் எழுந்தது. அரசு பள்ளிகளில் டெட் போன்ற தேர்வுகள் மூலம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வை நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டது. அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டது. அதில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பங்கேற்க வயது வரம்பு விதிக்கப்பட்டது.
இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ஆசிரியர் தேர்வுக்கான உச்ச வரம்பு 40 லிருந்து 45 ஆக உயர்த்தப்பட்டது. முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த மாதம் 18ம் தேதி முதல் நடைபெற தொடங்கியது. விண்ணப்ப பதிவின் போது சில கோளாறுகளால் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியவில்லை என்று விண்ணப்பதாரர்கள் புகார் அளித்து வந்தனர். இந்த நிலையில் மென்பொருள் மாற்றம் செய்யப்பட்டது. இது குறித்து தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு முக்கிய உத்தரவு – சொத்து மற்றும் கடன் விவர அறிக்கை சமர்ப்பிப்பு!
அதில் உடற்கல்வி இயக்குநர் நிலை 1 பணியிடத்திற்கு பணி நாடுநர்கள் இணையவழியில் விண்ணப்பிக்கும் போது M.P.Ed., கல்வித் தகுதி ஒரு வருட பயிற்சி காலம் முடித்தவர்கள் பதிவேற்றம் செய்வதற்கும் முதுகலைப் பட்டப்படிப்பு முதல் வருடம் பயின்று பின்னர் B.Ed., பட்டம் முடித்து அதன் பின்னர் முதுகலைப் பட்டப்படிப்பு இரண்டாம் ஆண்டு சேர்ந்து பட்டம் பெற்றவர்கள் பதிவேற்றம் செய்வதற்கு மென்பொருளில் தேவையான மாற்றங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் மேற்கொள்ளப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.