தமிழகத்தில் சனிக்கிழமை (அக்.30) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
குழித்துறை துணை மின் நிலையத்தில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
மின்தடை:
ஊரடங்கு காலத்தில் எந்த வித அறிவிப்புகளும் இன்றி மின்தடை செய்யப்பட்டு வந்தது. இது குறித்து புகார்கள் தொடர்ந்து எழுந்து வந்த காரணத்தால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் துணை மின் நிலையங்களில் மாதந்தோறும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணிகள் மேற்கொள்வதன் மூலம் மின் கம்பங்கள் மற்றும் மின் கம்பிகளில் பழுதுகள் ஏற்படாமல் தடுக்கப்படுகிறது.
தமிழகத்தின் இத்துறை தொழிலாளர்களுக்கு 15% தீபாவளி போனஸ் – ஜாக்பாட் அறிவிப்பு!
மேலும் எதிர் காலத்தில் மின் கம்பிகள் அறுந்து விழாமல் இருக்கும் வகையில் இந்த பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த மாதாந்திர பணிகள் முன் அறிவிப்புடன் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும் மின் பராமரிப்பு ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்படுகிறது. மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இடையில் தேவையின்றி மின்தடை ஏற்படும் வாய்ப்பு குறைவு என கூறப்படுகிறது.
TRB முதுகலை பட்டதாரி ஆசிரியர் வேலைவாய்ப்பு – விண்ணப்பதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
மற்ற பகுதிகளை தொடர்ந்து நாளை குழித்துறை துணை மின் நிலையத்தில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே ஆலுவிளை, மேல்புறம், மருதங்கோடு, கோட்டவிளை, செம்மங்காலை, இடைக்கோடு, மாலைக்கோடு, புலியூா்சாலை, மேல்பாலை, பனச்சமூடு, அருமனை, பளுகல், களியக்காவிளை, மடிச்சல், பாலவிளை, பெருந்தெரு, பழவாா், விளவங்கோடு, கழுவன்திட்டை, குழித்துறை, இடைத்தெரு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின்தடை ஏற்படும் என செய்தி வெளியாகியுள்ளது. மேலும் மின்பாதையில் பராமரிப்பு பணிகள் மற்றும் மின்கம்பங்களுக்கு மின் பாதைகளுக்கும் இடையூறாக இருக்கும் மரக்கிளைகள் அகற்றும் பணியும் நடைபெறுவதால் பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என கூறப்பட்டுள்ளது.