தீபாவளிக்கு சொந்த ஊர் செல்வோர் கவனத்திற்கு – 23 முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கம்!
தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக நவம்பர் 1 முதல் முன்பதிவு இல்லா 23 எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதனால் ரயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ரயில்கள் இயக்கம்:
தமிழகத்தில் கடந்த மே மாதம் பரவத் தொடங்கிய இரண்டாம் அலை கொரோனா உயிர்கொல்லி வைரசால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். இதன் தடுப்பு பணியின் ஒரு பகுதியாக ஊரடங்கு விதிக்கப்பட்டு கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. மேலும் மக்கள் வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு செல்வதற்கு இ-பதிவு கட்டாயப்படுத்தப்பட்டதால் ரயில் பயணிகளின் எண்ணிக்கை மிகவும் குறைந்தது. கொரோனா தொற்று பரவும் அச்சத்தாலும் மக்கள் பயணம் செய்வதை தவித்தனர். இதனால் ரயில்வே துறை பெரும் இழப்பை சந்தித்தது.
திருப்பதி ஏழுமலையான் தரிசனத்திற்கு செல்வோர் கவனத்திற்கு – முக்கிய விழாக்கள் அறிவிப்பு!
அதன் பிறகு அரசின் முயற்சியால் ஓரளவு தொற்று குறைய ஆரம்பித்ததும் பொதுமக்கள் தேவைக்காக முன்பதிவு கட்டாயமாக்கப்பட்டு படிப்படியாக ரயில்கள் இயக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது நவம்பர் 4ம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெவ்வேறு மாநிலங்களிலும் மாவட்டங்களிலும் இருந்து தந்து சொந்த ஊர்களுக்கு திரும்பும் ரயில் பயணிகளை கருத்தில் கொண்டு முன்பதில்லாமலும் ரயில்கள் இயக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. நவம்பர் 1ம் தேதி முதல் முன்பதிவில்லா பெட்டிகளுடன் வழக்கமான ரயில் சேவை தொடங்கப்படும் என ரயில்வே அதிகாரி தெரிவித்துள்ளார். முதல்கட்டமாக 23 எக்ஸ்பிரஸ் ரயில்களை முன்பதிவில்லா பெட்டிகளுடன் இயக்க முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் வியாழக்கிழமை (அக்.28) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
வண்டி எண் : 06850 ராமேஸ்வரம், 06849 திருச்சி-ராமேஸ்வரம், 06089 எம்.ஜி.ஆர். சென்ட்ரல்-ஜோலார்பேட்டை, 06090 ஜோலார்பேட்டை-எம்.ஜி.ஆர் சென்ட்ரல், 06302 திருவனந்தபுரம்-சோரணூர், 06301 சோரணூர் திருவனந்தபுரம், 06308 கண்ணூர்-ஆலப்புழா, 06307 ஆலப்புழா-கண்ணூர், 02628 திருவனந்தபுரம்-திருச்சி, 02627 திருச்சி-திருவனந்தபுரம், 06305 எர்ணாகுளம்-கண்ணூர், 06306 கண்ணூர்-எர்ணாகுளம், 06607 கண்ணூர்-கோவை, 06608 கோவை-கண்ணூர், 06342 திருவனந்தபுரம்- குருவாயூர், 06341 குருவாயூர்-திருவனந்தபுரம் ஆகிய ரயில்கள் முன்பதிவின்றி நவம்பர் 1 முதல் இயக்கப்படும் என்று ரயில்வே அறிவித்துள்ளது.