திருப்பதி ஏழுமலையான் தரிசனத்திற்கு செல்வோர் கவனத்திற்கு – முக்கிய விழாக்கள் அறிவிப்பு!

0
திருப்பதி ஏழுமலையான் தரிசனத்திற்கு செல்வோர் கவனத்திற்கு - முக்கிய விழாக்கள் அறிவிப்பு!
திருப்பதி ஏழுமலையான் தரிசனத்திற்கு செல்வோர் கவனத்திற்கு - முக்கிய விழாக்கள் அறிவிப்பு!
திருப்பதி ஏழுமலையான் தரிசனத்திற்கு செல்வோர் கவனத்திற்கு – முக்கிய விழாக்கள் அறிவிப்பு!

ஆந்திர மாநிலத்தில் உள்ள திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அடுத்த நவம்பர் மாதம் நடக்கும் விழாக்கள் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான்:

ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ள திருமலை திருப்பதி ஏழுமலையான் திருக்கோயில் உலகப்புகழ் பெற்றது. இந்த கோயிலுக்கு வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் தரிசனத்திற்கு வருகிறார்கள். கடந்த ஆண்டில் கொரோனா தொற்றின் காரணமாக கோயில் மூடப்பட்ட நிலையில் இருந்தது. தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் பக்தர்களின் கோரிக்கையை ஏற்று அரசு கோயிலை திறக்க அனுமதி அளித்தது. எனினும் கோயிலுக்கு தினசரி 5 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளித்து தரிசனம் வழங்கப்பட்டது. இந்த தரிசனத்திற்கான டோக்கன்களை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கொள்ளுமாறு தேவஸ்தானம் அறிவிப்பு வெளியிட்டது. அதனை தொடர்ந்து முன்பதிவு செய்து வரும் பக்தர்கள் முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளி கடைபிடித்தல் போன்றவற்றை பின்பற்றி தான் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

தமிழகத்தில் வியாழக்கிழமை (அக்.28) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

மேலும் 2 தவணை தடுப்பூசி போட்டுக்கொண்ட சான்றிதழ் அல்லது கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட நெகட்டிவ் சான்றிதழ் போன்றவை தேவஸ்தானத்தில் சமர்ப்பித்தல் அவசியம் என்று அறிவுறுத்தப்பட்டது. பக்தர்களின் நலன் கருதி டில்லி முதல் ஆந்திரா மாநிலத்திற்கு விமான வசதி தொடங்கப்பட்டுள்ளது. இவ்வாறாக பக்தர்கள் தரிசனம் பெற்று வருகின்றனர். இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் நவம்பர் மாதம் நடக்கும் விழாக்கள் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை: அதிரடியாக உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!

அதன்படி நவ.1-ம் தேதி மாதத் திரய ஏகாதசி, 4-ம் தேதி தீபாவளி ஆஸ்தானம், 6-ம் தேதி வைணவ ஆச்சாரியார் திருமலைநம்பி சாத்துமுறை, 8-ம் தேதி நாக சதுர்த்தியையொட்டி பெரிய சேஷ வாகன வீதி உலா, வைணவ ஆச்சாரியார் மணவாள மகாமுனிகள் சாத்துமுறை, 10-ம் தேதி புஷ்ப யாகத்தை முன்னிட்டு அங்குரார்ப்பணம், 11-ம் தேதி புஷ்ப யாகம், வைணவ ஆச்சாரியார் வேதாந்த மகாதேசிகன் சாத்துமுறை, 16-ம் தேதி கைசிக துவாதசி ஆஸ்தானம், சதுர்மாச விரதம் நிறைவு, 18-ம் தேதி காத்திகை தீப உற்சவம், 19-ம் தேதி திருமங்கை ஆழ்வார் சாத்துமுறை போன்ற விழாக்கள் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!