சமந்தா, நாக சைதன்யா விவகாரத்திற்கான பின்னணி – நடிகர் குடும்பத்தின் கட்டுப்பாடுகள் காரணமா?
கடந்த மாதம் முதல் அனைத்து சமூக ஊடகங்களிலும் பரபரப்பாக பேசப்பட்ட சமந்தா மற்றும் நாக சைதன்யா விவகாரம் தற்போது ஒரு முற்றுப்புள்ளியை எட்டியுள்ளது.
விவாகரத்து காரணம்:
தமிழ் சினிமாவில் மஸ்கோவின் காவிரி படத்தின் மூலம் அறிமுகம் ஆன சமந்தா பெரிய வரவேற்பு ஏதும் இல்லாமல் இருந்தார். அதன்பிறகு நடித்த படங்களின் மூலம் மிகவும் பிரபலமாகி தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக உள்ளார். தெலுங்கு பட உலகில் நாகார்ஜுனாவின் மகனான நாக சைதன்யா உடன் நடிக்கும் பொது ஏற்பட்ட காதலின் விளைவினால் இருவரும் மிகவும் பிரமாண்டமாக திருமணம் செய்து கொண்டனர்.
மீண்டும் பழைய ஐஸ்வர்யாவுடன் இணைந்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கண்ணன் – இன்ஸ்டா வீடியோ!
திருமணத்திற்கு பிறகும் எப்போதும் போல் நடித்து திரை உலகை கலக்கி வந்தார். இவர்கள் இருவரும் அவ்வப்போது சுற்றுலா செல்லும் இடங்களில் புகைப்படங்களை எடுத்து பதிவிட்டு வந்தனர். இருவரும் மிகவும் மகிழ்ச்சியாக ஹைதராபாத் நகரில் வாழ்ந்து வந்தனர். கடந்த சில மாதங்களாக சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவருக்கும் குடும்ப பிரச்சனைகள் இருப்பதாக சமூக ஊடகங்களில் செய்திகள் உலா வந்தது. நாக சைதன்யா குடும்பத்தினர் சமந்தாவிற்கு அதிக கட்டுப்பாடுகளை விதித்து வந்ததாக கூறப்படுகிறது. சமந்தா கணவரை விட அதிக புகழில் உள்ளதால், அவரை முழுவதுமாக சினிமாவை விட்டு விலகி விட வற்புறுத்தியுள்ளனர்.
கணவரின் விருப்பத்திற்கு சமந்தாவும் ஒத்துக் கொண்டு சினிமாவை விட்டு விலகி முடிவு செய்துள்ளார். ஆனால் திடீரென்று நாக சைதன்யா சமந்தாவை முழுவதுமாக பிரிவதற்கு முடிவு செய்துள்ளார். இதனால் தான் சமந்தா தன்னுடைய சமூக வலைத்தளத்தில் கணவரின் குடும்ப பெயருடன் இணைத்து இருந்த தன்னுடைய பெயரை வெறும் S என்று மாற்றியுள்ளார். இது குறித்து சமீப நாட்களாக பல வதந்திகளும் பரவியது. ஆனால் இருவருமே உண்மை என்ன என்று அறிவிக்காமல் இருந்தனர். ஆனால் , தற்போது இருவருமே தங்களுடைய சமூக வலைத்தளங்களில் இருவரும் பிரிவதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.
‘பாரதி கண்ணம்மா’ சீரியல் நடிகர், நடிகைகளின் ஒருநாள் சம்பளம் – ரசிகர்கள் ஷாக்!
மேலும், சமந்தா பிரிவிற்கு நாக சைதன்யாவிடம் ஜீவனாம்சமாக அதிக தொகை கேட்பதாகவும், அவர் வீட்டை ஐதராபாத் வீட்டை விட்டு மும்பையில் குடியேற இருப்பதாகவும் செய்திகள் வந்தது. ஆனால் சமந்தா தனது கணவரின் பிரிவிற்காக எந்த வித தொகையும் கேட்கவில்லை என்றும், அவர்கள் வசித்து வந்த வீட்டையும் சமந்தா தன்னுடைய சொந்த பணத்தை செலுத்தி முறையாக வாங்கிக்கொண்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.