மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையை ஏற்கும் தமிழக அரசு? கள நிலவரம்!
தமிழகத்தில் புதிய கல்வி கொள்கையை எதிர்த்து வரும் நிலையில் மக்கள் பள்ளி திட்டத்தை அரசு ஏற்றுக்கொண்டுள்ளதா என்ற கேள்வி எழுந்து வருகிறது.
மக்கள் பள்ளி திட்டம்:
தமிழகத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு கடந்த 1 ம் தேதி முதல் 9 முதல் 12 ம் வரையிலான மாணவர்களுக்கு மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 1 முதல் 8 வரையிலான மாணவர்களுக்கு மீண்டும் பள்ளிகளை திறக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இது குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும் நவம்பர் 1ம் முதல் 1 முதல் 8 வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். இந்த நிலையில் 1 முதல் 8 வரையிலான மாணவர்களுக்கு கற்றல் இடைவெளியை குறைப்பதற்கு மக்கள் பள்ளி என்ற திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பல் மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான கலந்தாய்வு – நாளை தொடக்கம்!
இந்த திட்டம் முதல் கட்டமாக கிருஷ்ணகிரி, நீலகிரி, விழுப்புரம், கடலூர், திருச்சி, திண்டுக்கல், காஞ்சிபுரம், தஞ்சாவூர், ஆகிய 8 மாவட்டங்களில் வரும் 18 ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. தன்னார்வலர்களை கொண்டு கற்றல் குறைபாடுகள் உடையவர்களுக்கு தினசரி பயிற்சி அளிப்பது இந்த திட்டத்தின் நோக்கமாகும். புதிய கல்விக் கொள்கையில் இடம் பெற்றுள்ள கற்றலுக்கு தேவையான அவசர மற்றும் அவசியமான தேவைப்பாடு என்கிற பகுதியில் தெரிவித்துள்ளபடி இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நீட் தேர்வு விண்ணப்ப பதிவு – முகவரி, கல்வித்தகுதி திருத்ததிற்கு அக்.10 வரை அவகாசம்!
புதிய கல்வி கொள்கையில் இடம்பெற்றுள்ள பெரும்பான்மையான அம்சங்களுக்கு தமிழகத்தில் கல்வியாளர்கள், அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் என அனைவரும் எதிர்த்து வரும் நிலையில் அதன் சிறப்பம்சங்களைக் கொண்டு இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதால் இது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இதில் புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ள தயாராகி விட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.