செழியனுக்கு குழந்தை பெற்றுக் கொள்ள விருப்பமில்லை என பாட்டியிடம் சொல்லும் ஜெனி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!!

0
செழியனுக்கு குழந்தை பெற்றுக் கொள்ள விருப்பமில்லை என பாட்டியிடம் சொல்லும் ஜெனி - இன்றைய
செழியனுக்கு குழந்தை பெற்றுக் கொள்ள விருப்பமில்லை என பாட்டியிடம் சொல்லும் ஜெனி - இன்றைய "பாக்கியலட்சுமி" எபிசோட்!!
செழியனுக்கு குழந்தை பெற்றுக் கொள்ள விருப்பமில்லை என பாட்டியிடம் சொல்லும் ஜெனி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், எழில் ஆபிஸ்க்கு செல்லும் பாக்கியாவும் செல்வியும் அங்கே எழிலும் அமிர்தாவும் பாக்கியாவிற்கு சமையல் ஆர்டர் செய்ய ஐடியா ஒன்றை சொல்கின்றனர்.பின் ஜெனி வாந்தி அதிகமாக வருகிறது என்னால் ஆபிஸ்ஸில் இருக்க முடியவில்லை என சொல்கிறார்.

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், எழில் அமிர்தாவும் ஆபிஸில் இருந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது பாக்கியாவும் செல்வியும் அங்கே வருகின்றனர். பின் செல்வி அமிர்தாவிடம் படத்தை பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர். பின் பாக்கியா சமையல் ஆர்டர் செய்ய சம்மதம் தெரிவித்ததை பற்றி எழிலிடம் சொல்கிறார், அப்போ ஒன்னும் பிரச்சனை இல்லை இது போல பண்ணிரலாம் என ஐடியா ஒன்றை சொல்கிறார். அப்போது தான் பாக்கியாவிற்கு நிம்மதியாக இருக்கிறது.

ஜெனி ஆபிஸில் இருந்து சீக்கிரமாக வீட்டிற்கு வருகிறார். பாட்டி என்னாச்சு என கேட்க, 5 நிமிடத்திற்கு ஒருதடவை ஒரே வாந்தி அதான் வந்துவிட்டேன் என சொல்ல, அப்படி தான் வாந்தி வரும் அதெல்லாம் கவலைப்படாதே இப்போ வேலை முக்கியமா என கேட்கிறார். உடனே பாட்டி நான் மோர் கொண்டு வரேன் என சொல்லி செல்கிறார். பின்னால் தாத்தாவை அழைக்க, செழியன் ஜெனியை திட்ட தொடங்குகிறார். என்ன இப்படி லீவு போட்டு அடிக்கடி வர என கேட்க, நான் என்ன செய்வது என ஜெனி கேட்கிறார்.

அம்மாவிற்கு மொட்டை அடித்து இறுதி சடங்கு செய்யும் கண்ணன் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!!

இதற்கு தான் அப்பவே சொன்னேன் குழந்தை எல்லாம் வேண்டாம் என சொல்கிறார். உடனே பாட்டி அங்கே வர எதற்கு செழியன் சத்தமாக பேசினான் என கேட்கிறார். உடனே ஜெனி அவன் குழந்தை வேண்டுமா என நினைக்கிறான் என சொல்ல, வேலை எப்ப வேண்டும் என்றாலும் கிடைக்கும் ஆனால் குழந்தை கிடைக்குமா என பாட்டி கேட்கிறார். உனக்கு வேலை பார்க்க நாங்க இருக்கோம் ஆனால் எங்களுக்கு யாரும் இல்லை என சொல்கிறார்.

பின் பாக்கியா ராதிகா வீட்டிற்கு வருகிறார். பெரிய சமையல் ஆர்டர் வந்திருக்கு தெருவில் இருக்கும் அனைவரும் சேர்ந்து பண்ணலாம் என நினைக்கிறன் என சொல்ல, நன்றாக செய்துவிடலாம் என ராதிகா சொல்கிறார். பாக்கியாவும் ராதிகாவை பார்த்ததில் நம்பிக்கை வந்துவிட்டது என சொல்கிறார். பாட்டி பாக்கியா லேட்டாக வந்ததை சொல்லி சத்தம் போடுகிறார். ஏன் இப்படி ஊர் சுத்துகிறாய் என திட்டுகிறார். வீட்டில் என்ன நடக்கிறது என நீ பார்க்கவே இல்லை என சொல்ல, பாக்கியா என்னாச்சு என கேட்கிறார்.

வெளிவந்த பாரதியின் உண்மை முகம், இரண்டாவது குழந்தையை நினைத்து வருத்தப்படும் கண்ணம்மா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!!

ஜெனிக்கு குழந்தை பெற்றுக் கொள்ள விருப்பம் இருக்கா இல்லையா என கேட்க, அவள் வாந்தி எடுத்தனால ஒரு மாதிரி இருப்பா என பாக்கியா சொல்கிறார்.அதெல்லாம் இல்லை அவளுக்கு குழந்தை பெற்றுக் கொள்ள விருப்பம் இல்லை என பாட்டி சொல்கிறார். நான் கேட்டால் செழியனுக்கு விருப்பம் இல்லை என சொல்றா இதை எல்லாம் நீ கேட்க மாட்டியா என பாட்டி சொல்கிறார். செழியனுக்கு சின்ன வயதில் குழந்தை பெற்று கொள்வது வருத்தமாக இருக்கு என பாக்கியா சொல்கிறார்.

இனிமேல் வீட்டில் இருந்து என்ன பிரச்சனை நடக்கிறது என கவனி என சொல்கிறார். பின் ஜெனி தூங்கி கொண்டிருக்க பாக்கியா வருகிறார். பாட்டி என்ன கேட்டார்கள் என கேட்க ஆபிஸிற்கு அடிக்கடி லீவு எடுக்க முடியாது என சொல்கிறார். அப்போது செழியன் ஆபிசில் அடிக்கடி லீவு எடுக்க முடியாது என சொல்ல, ஜெனி நீ ஆபிசில் எல்லாரிடமும் சொல்லி உன் நிலைமையை புரிய வை என பாக்கியா சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!