அம்மாவிற்கு மொட்டை அடித்து இறுதி சடங்கு செய்யும் கண்ணன் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், அம்மாவை நானே கொன்றுவிட்டேன் அண்ணி சொன்னது எல்லாம் சரி தான் என கண்ணன் அழுது புலம்புகிறார். பின் கண்ணன் மொட்டை அடித்து அம்மாவிற்கு இறுதி சடங்குகளை செய்கிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கண்ணன் அண்ணி சொன்னதை கேட்டு கடைசி வரை அம்மா என்னை பார்க்க வேண்டாம் என நினைத்திருக்கார் என சொல்லி அழுகிறார். எல்லாரையும் பற்றி நினைக்காமல் நான் எடுத்த சுயநலமான முடிவு இப்படி நடந்துவிட்டதே என கண்ணன் கதறி அழுகிறார். எனக்கு வாழவே பிடிக்கவில்லை என கண்ணன் அழ ஐஸ்வர்யா சமாதானம் செய்கிறார். கடைசியாக மருத்துவமனையில் கூட அம்மாவிற்கு என்னை பார்க்க பிடிக்கவில்லை. அவ்வளவு தப்பு நான் செய்தது என சொல்கிறார்.
பின் வீட்டில் இருப்பவர்கள் சோகத்துடன் அமர்ந்து கொண்டிருக்க முல்லையின் அம்மா வந்து எல்லாரையும் படுக்க சொல்கிறார். அப்போது முல்லையின் அப்பா எனக்கு வர வேண்டியது இப்படி என் அக்காவிற்கு வந்துவிட்டதே என சொல்லி அழுகிறார். பின் அனைவரும் படுக்க செல்ல ஜீவா எனக்கு தூக்கம் வரவில்லை என சொல்கிறார். மறுநாள் அம்மாவிற்கு காரியம் செய்ய அனைவரும் வர அங்கே கண்ணன் மொட்டை அடித்து கொண்டிருக்கிறார். அதை பார்த்ததும் அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
ஜனார்த்தனன் அவனை தடுக்க செல்ல மூர்த்தி வேண்டாம் என சொல்கிறார். பின் கண்ணன் எல்லா காரியங்களை செய்துவிட்டு நான் செய்தது தப்பு தான் என சொல்லி அழுகிறார். நான் இப்படி எல்லாம் நடக்கும் என தெரிந்து இப்படி நடந்துக்கவில்லை. நான் எதோ செய்ய போய் உங்களுக்கு இப்படி ஆகிவிட்டது. நீ செத்து போக நானே காரணம் ஆகிவிட்டேன் என சொல்லி அழுகிறார். கடைசியாக உங்க முகத்தை பார்க்கும் கொடுப்பனை கூட இல்லாமல் போய்விட்டது என சொல்லி அழுகிறார்.
அதை பார்த்து மூர்த்தி கதிர் ஜீவா அழுகிறார். டேய் கண்ணா என முல்லையின் அப்பா அழைக்க அண்ணன்களை பார்த்து கண்ணன் விலகி செல்கிறார். பின் அவர்கள் வந்து காரியம் செய்கின்றனர். அம்மாவிற்கு செய்ய வேண்டியதை செய்துவிட்டு திரும்பி செல்கின்றனர். கண்ணன் பாவமாக பார்க்க மூர்த்தி அவரை திரும்பி பார்க்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.
பாண்டின்ஸ்டோர்ஸ் ல் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை முதலில் தீபா மாறினார் இப்போது இரண்டு நாட்களாக முல்லையை காணவில்லை.