ஐஸ்வர்யாவை தேடி அலையும் சித்தி, திருமணம் செய்ய திட்டமிடும் கண்ணன், ஐஸ்வர்யா – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், இன்று கண்ணனும், ஐஸ்வர்யாவும் வீட்டை விட்டு வெளியே செல்கின்றனர். தனம் நேரம் ஆகியும் கண்ணனை காணவில்லை என கவலைப்படுகிறார். கண்ணனும், ஐஸ்வர்யாவும் திருமணம் செய்து கொள்ள திட்டமிடுகிறார்கள்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் ஐஸ்வர்யா, பிரசாந்துடன் கல்யாணத்தை நிறுத்த, வீட்டை விட்டு வெளியே வருகிறார். அங்கே வழியில் கண்ணனை பார்க்கிறார். நீ எனக்காக தான் வெளியே வந்துருக்க ஆனால் என்னால இத பத்தி வீட்டில் சொல்ல கூட முடியவில்லை நான் வேஸ்ட் என்று கண்ணன் கவலைப்படுகிறார். சரி நான் எங்கேயாவது போறேன் என்று ஐஸ்வர்யா கிளம்ப, என்னால தான நீ வீட்டை விட்டு வெளியே வந்த எப்படி நான் உன்னை இப்படி விட முடியும் என இருவரும் கெளம்புகின்றனர்.
தனம் கண்ணனை காணவில்லை என கவலைப்படுகிறார். கண்ணன் பணத்தை திருடி என்ன செய்தான் என கேள்வி வர ஐஸ்வர்யாவுக்கு பீஸ் கட்டியதை முல்லை சொல்கிறார். உடனே ஐஸ்வர்யாக்கு கல்யாணம் நடக்க உள்ள நேரத்தில் இப்படி பண்றான் என தனம் கவலைபடுகிறார்.உடனே தனத்தின் அம்மா, தனத்தை திட்டுகிறார்.
ஐஸ்வர்யாவின் சித்தி மதுரைக்கு கிளம்ப தயாராகி கொண்டிருக்கின்றனர். அப்போது ஐஸ்வர்யாவை தேடி அவரது ரூம்க்கு செல்ல அங்கே அவரை காணவில்லை. மறுபுறம் ஐஸ்வர்யாவும் கண்ணனும் நண்பர்களை சந்தித்து பேசிக்கொண்டிருக்கின்றனர். வீட்டிற்கு சென்றால் பிரித்து விடுவார்கள், நம்ம கல்யாணம் செய்து கொள்ளலாம் என திட்டமிடுகின்றனர்.
Tokyo Olympics: வெண்கல பதக்கத்தை கைப்பற்றிய பிவி சிந்து – வரலாற்று சாதனை!
ஐஸ்வர்யாவின் சித்தி, அனைத்து இடங்களிலும் தேடி கொண்டிருக்கின்றனர். அப்போது கண்ணனின் நண்பர்கள், ஐஸ்வர்யாவின் நண்பர்கள் கோவிலில் பேசிக்கொண்டிருக்க, ஜீவாவின் நண்பன் ஒருவர் வருகிறார். ஐஸ்வர்யாவிற்கும், கண்ணனிற்கும் திருமணம் உடைகள் வாங்க திட்டமிடுகின்றனர். மேலும் அடையாள ப்ரூப் எடுக்க கண்ணன் செல்கிறார். அப்போது ஜீவா அங்கே வருகிறார். இத்துடன் இந்த எபிசோட் முடிவடைகிறது.
“பாரதி கண்ணம்மா” சீரியல் விடீயோவை பார்க்க கிளிக் பண்ணுங்க!!