Tokyo Olympics: வெண்கல பதக்கத்தை கைப்பற்றிய பிவி சிந்து – வரலாற்று சாதனை!
டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் பிவி சிந்து வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். ஒலிம்பிக் போட்டியில் 2 முறை பதக்கம் வென்ற ஒரே வீராங்கனை பிவி சிந்து என்பது குறிப்பிடத்தக்கது.
ஒலிம்பிக் போட்டிகள்:
2020ம் ஆண்டு நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டிகள் கொரோனா பரவலால் தள்ளிவைக்கப்பட்டது. இது தற்போது ஜப்பானின் டோக்கியோ நகரில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளுக்கு உட்பட்டு நடைபெற்று வருகிறது. பளுதூக்குதல் பிரிவில் மீராபாய் சானு வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றி சாதனை படைத்தார். இதுவரை இந்தியா 1 பதக்கத்தை மட்டுமே வென்றுள்ளது. பேட்மின்டன் போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிவி சிந்து அரையிறுதியில் தோல்வி அடைந்து ஏமாற்றம் அளித்தார்.
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு, பாடத்திட்டங்கள் குறைப்பு? அமைச்சர் விளக்கம்!
இருப்பினும் இன்று வெண்கலப் பதக்கத்திற்கான போட்டி நடைபெற்றது. இதில் பிவி சிந்து, சீனாவின் ஹி பிங் ஜியாவோவை எதிர்கொண்டார். மொத்தம் 53 நிமிடங்கள் நீடித்த இப்போட்டியில் 21-13 மற்றும் 21-15 என்ற கணக்கில் பிவி சிந்து வெற்றி பெற்று வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றி உள்ளார். இதன் மூலம் ஒலிம்பிக் போட்டியில் 2 முறை பதக்கம் வென்ற முதல் வீராங்கனை என்கிற வரலாற்று சிறப்புமிக்க சாதனையை சிந்து படைத்துள்ளார். இவருக்கு நாடு முழுவதும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.