அம்மா வீட்டிற்கு செல்லும் ஜெனி, அமிர்தா குடும்பத்துடன் நெருக்கமாகும் எழில் – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் இன்று ஜெனி செழியனின் நடவடிக்கை பிடிக்காத காரணத்தால் தனது அம்மா வீட்டிற்கு போக கிளம்புகிறார். எழில் அமிர்தாவின் குடும்பத்திற்கு உதவி செய்து மேலும் நெருக்கமாக பழகுகிறார்.
பாக்கியலட்சுமி:
இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், ஜெனி தனது அம்மாவை பார்க்க அவரது வீட்டிற்கு கிளம்புகிறார். பாக்கியாவும், அவரது மாமியாரும் ஜெனி போவது சரி இல்லை, செழியனும் சரியாக பேசுவதில்லை. அவர்களுக்குள் ஏதாவது சண்டை இருக்குமா என பேசிக்கொண்டிருக்கின்றனர். ஜெனியை கூப்பிட்டு கேட்க அவர் அப்படியெல்லாம் எதுவும் இல்லை என்று சொல்லி சமாளிக்கிறார்.
எழில், அமிர்தா குடும்பத்தினரை காரில் கோவிலுக்கு செல்ல ஏற்பாடு செய்கிறார். அவர்களுக்கு எழில் நடவடிக்கைகள் மிகவும் பிடித்து விட்டது. ஜெனி தான் அம்மா வீட்டிற்கு செல்வதாக செழியனிடம் சொல்ல அவரை பற்றி கவலையே இல்லாமல் கண்டுகொள்ளாமல் செழியன் இருக்கிறார். ஜெனி அதை நினைத்து கவலைப்பட்டு பாத்ரூமில் சென்று அழுகிறார். பின்னர் வீட்டில் இருக்கும் அனைவரிடமும் சொல்லிவிட்டு கிளம்ப தனியா போறியா ஏன் செழியன் வரவில்லையா என அனைவரும் கேள்வி கேட்கின்றனர்.
இல்ல அவர் வரவில்லை, நான் தனியா போய்விடுவேன் என்று சொல்ல இனியா நான் வேணும்னா கூட வரவா என்று கேட்கிறார். உடனே செழியன் இருக்கும் போது நீ ஏன் தனியாக போகனும், என்று செழியனை அழைத்து ஜெனியை கொண்டு சென்று விடுமாறு கூறுகின்றனர். உடனே செழியன் கிளம்பி வர இருவரும் பைக்கில் செல்கின்றனர்.
எழில், அமிர்தாவின் குடும்பத்துடன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்கின்றனர். அமிர்தா பிரசாதம் வாங்க போக, எழில் என் அம்மா போல இருக்கீங்க என்று சொல்ல, உன் அம்மாவை ஒரு நாள் கூட்டிட்டு வா தம்பி என்று அமிர்தா குடும்பத்தினர் கூறுகின்றனர். அடுத்து அமிர்தாவை பாட்டு பாட சொல்ல அவர் அருமையாக பாடுகிறார். இத்துடன் இந்த எபிசோட் முடிவடைகிறது.
“பாரதி கண்ணம்மா” சீரியல் விடீயோவை பார்க்க கிளிக் பண்ணுங்க!!