பாக்கியாவை வண்டி வாங்க சொல்லும் ராதிகா – கோபி சம்மதிப்பாரா? சூடுபிடிக்கும் ‘பாக்கியலட்சுமி’!
விஜய் டிவியில் விறுவிறுப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வரும் “பாக்கியலட்சுமி” சீரியலில் இன்று பாக்கியா தான் வண்டி வாங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். அதே போல் டிரைவிங் ஸ்கூலில் சேர விசாரித்து விட்டும் வருகிறார்.
“பாக்கியலட்சுமி” சீரியல்
இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில் எழில் அம்ரிதாவுடன் பேசுவதை கேட்கும் செழியன் இருவரையும் தவறாக நினைத்து விடுகிறார். வீட்டினர் ஆசைப்படும்படி தான் திருமணம் செய்து கொள்ளவில்லை என்றும், அதனால் எழில் காதல் என்று இல்லாமல் வீட்டில் பார்க்கும் பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தி விட்டு செல்கிறார். பின், பாக்கியா தான் புது வண்டி வாங்குவது போல கனவு காணுகிறார். அதே போல் இரவு தூங்கும் போது வண்டி ஓட்டுவது போல கனவு காணுகிறார். இதனை பார்க்கும் இனியா பயந்து பாக்கியவை எழுப்பி விடுகிறார்.
தமிழக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விநியோகம் – பொதுமக்கள் ஏமாற்றம்!
இப்படியாக இருக்க, காலையில் பாக்கியா, ராதிகா வீட்டிற்கு சென்று அவருக்கும் மயூரிக்கும் உணவு எடுத்து வழங்குகிறார். உணவின் சுவை குறித்து கூற வேண்டும் என்று கூறுகிறார். பின், ராதிகா மற்றும் பாக்கியா இருவரும் பேசுகையில் ராதிகா, பாக்கியவை பாண்டி வாங்க சொல்லி வலியுறுத்திக்கிறார். இது குறித்து பாக்கியாவும் யோசிக்கிறார்.
TN Job “FB Group” Join Now
பின், ஒரு டிரைவிங் ஸ்கூல் சென்று தனக்கு வண்டி ஓட்ட கற்றுத் தர வேண்டும் என்று கூறுகிறார். அதற்கு அங்கு முதலில் 4000 ரூபாய் காட்டினால் தான் வண்டி ஓட்ட சொல்லி தர முடியும் என்று கூறி விடுகின்றனர். இதனால் முதலில் அதிர்ச்சி அடையும் பாக்கியா பின் கற்றுக் கொள்ள வேண்டும் என்று முடிவு எடுக்கிறார். பின், வீட்டிற்கு வந்ததும் ராதிகா வீட்டிற்கு சென்றது குறித்து கோபியிடம் தெரிவிக்கிறார். இதனால் கோபி கோபம் அடைந்து விடுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைந்து விடுகிறது.