தமிழக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விநியோகம் – பொதுமக்கள் ஏமாற்றம்!

0
தமிழக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விநியோகம் - பொதுமக்கள் ஏமாற்றம்!
தமிழக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விநியோகம் - பொதுமக்கள் ஏமாற்றம்!
தமிழக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விநியோகம் – பொதுமக்கள் ஏமாற்றம்!

தமிழகத்தில் பல மாவட்டங்களில் ரேஷன் பொருள்கள் சரியாக கிடைக்கவில்லை என புகார்கள் எழுந்துள்ளது. குறிப்பாக துவரம் பருப்பு பல இடங்களில் விநியோகம் செய்யப்படாத காரணத்தால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.

ரேஷன் கடைகள்:

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே வர அறிவுறுத்தப்பட்டனர். இதனால் அன்றாடம் தொழில் செய்யும் தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை சரி செய்ய அனைத்து மாவட்ட ரேஷன் கடைகளிலும் அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட இலவச பொருள்கள் வழங்கப்பட்டது.

செப்டம்பர் முதல் 12 -18 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி – நிபுணர் குழு தகவல்!

மேலும் கொரோனா நிவாரண நிதியாக ரூ.4000 மற்றும் 14 மளிகை பொருள்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது. இதனால் அரிசி அட்டைதாரர்கள் பலன் அடைந்தனர். குறிப்பாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மட்டும் 75 சதவீத மக்கள் ரேஷன் பொருள்களை நம்பியுள்ளனர். மேலும் தற்போது நிலைமை சரியான காரணத்தினால் குறிப்பிட்ட தேதிகளில் மட்டுமே பொருள்கள் வழங்கப்படுகின்றன.

இதனால் கொரோனா காலத்தில் வழங்கப்பட்டது போல பிற நாட்களிலும் பொருள்கள் ஒரே தொகுப்பாக ரேஷன் கடைகளில் வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதனால் அளவு குறைபாடு பிரச்சனை வராது எனவும் அனைத்து பொருள்களும் மக்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அரசு சார்பில் ரேஷன் பொருள்களின் தரம் பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் வழக்கமான பொருட்கள் கிடைக்கவில்லை என மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். குறிப்பாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்கள் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு போதிய அளவு வரத்து இல்லாததால் குடும்ப அட்டைதாரர்களுக்கு பருப்பு விநியோகம் செய்யப்படவில்லை என தெரிவித்துள்ளனர். இது குறித்து விற்பனையாளர்கள் கடைகளுக்கு மற்ற பொருட்கள் சரிவர கிடங்கில் இருந்து விநியோகம் செய்யப்படவில்லை என புகார் தெரிவித்துள்ளனர்.

TN Job “FB  Group” Join Now

இந்த குறிப்பிட்ட மாவட்டங்களில் மட்டுமில்லாமல் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் இந்த பிரச்சனை உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு இல்லையென்றால் உடனடியாக கிடங்குகளில் இருந்து கடைகளுக்கு விநியோகம் செய்யப்படும். ஆனால் தற்போது பருப்புகள் கிடங்குகளுக்கே வரவில்லை. மற்ற பொருள்கள் ஓரிரு தினங்களில் கடைகளுக்கு விநியோகம் செய்யப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!