சட்டப் பேரவை உறுப்பினர்களுக்கு (MLA) ரூ.90,000 வரை சம்பள உயர்வு – அரசு முக்கிய அறிவிப்பு!
தேசிய தலைநகர் டெல்லியில் ஆட்சியமைத்துள்ள ஆம் ஆத்மி தலைமையிலான சட்டப் பேரவை உறுப்பினர்களுக்கு (MLA) 66% சம்பள உயர்வு அமல்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் அவர்களின் ஊதியம் ரூ.90,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
ஊதிய உயர்வு
டெல்லியில் உள்ள சட்டப் பேரவை உறுப்பினர்களின் (MLA) சம்பளத்தை உயர்த்துவதற்கான திருத்தப்பட்ட திட்டத்தை ஆம் ஆத்மி அரசாங்கம் மத்திய அரசுக்கு அனுப்பி, கிட்டதட்ட ஒன்பது மாதங்கள் கடந்துள்ள நிலையில் தற்போது இது குறித்த ஜாக்பாட் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் MLAக்களின் மாதாந்திர ஊதியத்தை ரூ.54,000 லிருந்து ரூ.90,000 ஆக உயர்த்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இது தொடர்பான அதிகாரிகளின் கூற்றுப்படி, தொகுதி, செயலாளர், தொலைபேசி மற்றும் போக்குவரத்து கொடுப்பனவுகளை மறுசீரமைப்பதைத் தவிர, சம்பளக் கூறுகளை ரூ.12,000 லிருந்து ரூ.30,000 ஆக உயர்த்துவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
பள்ளி மாணவர்களுக்கான கோடை விடுமுறை 10 நாட்களாக குறைப்பு – மாநில அரசு நடவடிக்கை!
டெல்லி அரசு இப்போது இந்த திட்டத்தை சட்டமன்றத்தில் முன்வைத்து, அவை நிறைவேற்றப்பட்டதும் அறிவிப்புகளை கொடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், டெல்லி எம்.எல்.ஏ.க்களின் சம்பளம் மற்றும் கூடுதல் படிகள் கடைசியாக 2011ல் திருத்தப்பட்டது. தொடர்ந்து கடந்த 2015 ஆம் ஆண்டு ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் குடும்பங்கள் மற்றும் அலுவலகங்களை நடத்துவதற்கு தற்போதுள்ள ஊதியங்கள் போதுமானதாக இல்லை என்று வாதிட்டு அவர்களின் சம்பளத்தில் குறிப்பிடத்தக்க உயர்வைக் கோரினார்கள். பின்னர் 400% உயர்வை முன்மொழிந்த மக்களவையின் முன்னாள் பொதுச்செயலாளர் பி டி டி ஆச்சாரி தலைமையில் மூன்று பேர் கொண்ட குழுவை அரசு அமைத்தது.
Exams Daily Mobile App Download
இந்த குழுவின் பரிந்துரைகளை ஏற்று, ஆம் ஆத்மி அரசாங்கம் கடந்த 2015ல் சட்டசபையில் ஒரு திட்டத்தை நிறைவேற்றியது. ஆனால் அதை ஏற்க மத்திய அரசு மறுத்துவிட்டது. இது தொடர்பான பரிந்துரைகளைத் தொடர்ந்து, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் நடைபெற்ற டெல்லி அமைச்சரவை கூட்டத்தில், தற்போதைய முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்து மீண்டும் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. இதை தொடர்ந்து டெல்லி எம்எல்ஏக்களுக்கு 66% சம்பள உயர்வு என்ற அடிப்படையில் மாதாந்திர ஊதியத்தை ரூ.54,000 லிருந்து ரூ.90,000 ஆக உயர்த்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.