TCS & Infosys நிறுவனத்தில் 90,000+ பேருக்கு வேலைவாய்ப்பு – முழு விவரம் இதோ!
இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களான TCS மற்றும் Infosys ஆகியவை இந்த ஆண்டு சுமார் 90,000க்கும் மேற்பட்ட புதியவர்களுக்கு வேலைவாய்ப்புகளை அளிக்க இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
IT வேலைவாய்ப்பு:
சமீப காலமாக இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் அட்ரிஷன் விகிதம் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் வேளையில், புதியவர்களுக்கான வேலைவாய்ப்புகளும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பு ஆண்டில் TCS மற்றும் Infosys ஆகிய நிறுவனங்கள், சுமார் 90,000க்கும் மேற்பட்ட புதியவர்களுக்கு வேலைவாய்ப்புகளை அளிக்க இருப்பதாக அறிவித்துள்ளது. இதற்கிடையில் இன்ஃபோசிஸின் வேலை இழப்பு விகிதம் மார்ச் 2022ல் 25.5 சதவீதத்தில் இருந்து 27.7 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது குறித்து இன்ஃபோசிஸின் தலைமை நிதி அதிகாரி நிலஞ்சன் ராய், இந்நிறுவனத்தின் தேய்மானம் மொத்த எண்ணிக்கையில் சுமார் 5 சதவீதம் குறைந்துள்ளதாகக் கூறியுள்ளார்.
தரவரிசை பட்டியல், 7 நாட்களுக்குள் கட்டணம் – இன்ஜினியரிங் கலந்தாய்வில் புதிய விதிகள் என்னென்ன?
இது தொடர்பாக வெளியான அறிக்கைகளின்படி, இன்ஃபோசிஸ் மற்றும் டிசிஎஸ் ஆகியவை கடந்த 2021ம் நிதியாண்டில் 61,000 பேரை வளாகத்தில் பணியமர்த்தியுள்ளன. மேலும் டிசிஎஸ் மற்றும் இன்ஃபோசிஸ் 2022 நிதியாண்டில் முறையே 1,00,000 மற்றும் 85,000 புதியவர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளன. இதற்கிடையில் இன்ஃபோசிஸ் நிறுவனம் வரும் 2023 நிதியாண்டிலும் 50,000க்கும் மேற்பட்ட புதியவர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில், TCS நிறுவனமும் 40,000க்கும் மேற்பட்ட நபர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இதற்கிடையில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம், ஊழியர்களின் WFH முறையை முடித்து 25X25 மாடலை அமல்படுத்த முடிவு செய்துள்ளது. இந்த முறையில் ஊழியர்கள் மீண்டுமாக அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டு, படிப்படியாக ஹைப்ரிட் வேலை மாதிரிக்கு மாற்றுவதை அலுவலகம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த 25X25 மாடலின் கீழ், 2025ம் ஆண்டுக்குள் இந்நிறுவனத்தின் 25 சதவீத ஊழியர்கள் அலுவலகத்தில் இருந்து வேலை செய்ய இருக்கிறார்கள். மற்றவர்கள் வீட்டிலிருந்து வேலை செய்வதை தொடருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.