தரவரிசை பட்டியல், 7 நாட்களுக்குள் கட்டணம் – இன்ஜினியரிங் கலந்தாய்வில் புதிய விதிகள் என்னென்ன?
தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு அட்டவணையை உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. நீட் தேர்வு முடிவுகள் வெளியான பிறகே பொறியியல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கலந்தாய்வு:
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 13ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதனை தொடர்ந்து கல்லூரிகளில் ஜூன் மாத இறுதியில் செமஸ்டர் தேர்வு நடைபெற உள்ளது. இந்த நிலையில் பொறியியல் கலந்தாய்வு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் உயர்கல்வித்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்றது. அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நீட் தேர்வு முடிவுகள் வந்த பிறகே பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு நடைபெறும் என்று தெரிவித்தார். பொறியியல் படிப்பில் சேர்ந்து விட்டு பின்னர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாணவர்கள் மருத்துவ கல்லூரிகளுக்கு சென்று விடுகின்றனர்.
சென்னை: மீண்டும் கிடுகிடுவென உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை – இன்றைய நிலவரம்!
இதனால் பொறியியல் கல்லூரிகளில் காலியிடங்கள் அதிகமாக இருக்கிறது. இதனை தவிர்க்கவே நீட் தேர்வு முடிவுக்கு பிறகு பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது. வரும் கல்வியாண்டில் ஆன்லைன் வழியில் 4 கட்டங்களாக நடைபெறும் என்றும் இனி 7 நாட்களுக்கு பதில் 2 வார காலத்திற்கு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022 – 2023 ம் கல்வியாண்டில் ஜூன் 20ம் தேதி பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து தரவரிசைப் பட்டியல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வெளியிடப்படும்.
Exams Daily Mobile App Download
மேலும் சிறப்பு பிரிவு கலந்தாய்வு ஆகஸ்ட் 16 மற்றும் 18 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்றும் பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 22ஆம் தேதி முதல் அக்டோபர் 14ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டு கலந்தாய்வில் தேர்தெடுக்கப்பட்ட மாணவர்கள் கட்டணத்தை 7 நாட்களுக்குள் செலுத்த வேண்டும். அதற்குள் செலுத்தவில்லை என்றால் ,அந்த இடம் காலியிடமாக கருதப்பட்டு தரவரிசையில் சேர்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.