முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் 9 மணிநேரம் தளர்வு – மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை!
மத்திய பிரதேச மாநிலம் கர்கோனில் நடைபெற்ற வன்முறையை அடுத்து ஏப்ரல் 10 முதல் அப்பகுதியில் விதிக்கப்பட்டிருக்கும் முழு ஊரடங்கு உத்தரவு நேற்று (ஏப்ரல்.27) சுமார் ஒன்பது மணி நேரம் தளர்த்தப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
முழு ஊரடங்கு
இந்த மாத தொடக்கத்தில் நடைபெற்ற ராம நவமி கொண்டாட்டத்தின் போது மத்தியப் பிரதேசத்தின் கர்கோன் நகரில் வெடித்த வன்முறை தொடர்பாக இதுவரை 177 பேரை காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் நடைபெற்ற ஏப்ரல் 10 ஆம் தேதி முதல், கர்கோன் பகுதியில் சட்டம் ஒழுங்கை நிலை நாட்டும் நடவடிக்கையாக முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை மாவட்ட நிர்வாகம் அமல்படுத்தி இருக்கிறது. இது தவிர ஊரடங்கு கட்டுப்பாடுகளில் இருந்து, ஏப்ரல் 14ம் தேதி முதல் தினசரி 4 மணி நேரத்திற்கு தளர்வுகள் கொடுக்கப்பட்டு வருகிறது.
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் கார்கோன் நகரில் அமலில் இருக்கும் ஊரடங்குச் சட்டம், கூடுதலாக நேற்று (ஏப்ரல்.27)காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை ஒன்பது மணி நேரம் தளர்த்தப்பட்டதாக அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர். இருப்பினும் வரவிருக்கும் மதப் பண்டிகைகளைக் கருத்தில் கொண்டு அப்பகுதியில் இரவு ஊரடங்குச் சட்டம் தொடரும் என்று அம்மாவட்டத்திற்கு தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ள ஐபிஎஸ் அதிகாரி அங்கித் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
மே 16ம் தேதி பள்ளி, கல்லூரிகள் திறப்பு – கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!
இதற்கு முன்னதாக ஏப்ரல் 10 ஆம் தேதி நடந்த வகுப்புவாத வன்முறை தொடர்பாக கர்கோனில் இதுவரை 74 முதல் தகவல் அறிக்கைகள் (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளன. வழக்கு தொடர்பாக சுமார் 177 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் தலைமறைவான குற்றவாளிகளைத் தேடும் பணி நடைபெற்று வருவதாக ஐபிஎஸ் அதிகாரி ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். இப்போது ஊரடங்கு தளர்வு காலங்களில் மக்கள் அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்பட்டாலும், வன்முறையின் போது பெட்ரோல் பயன்படுத்தப்பட்டதால் பம்புகள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.