அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – ஏப்ரல் 30 முதல் 9 நாட்களுக்கு பொது விடுமுறை!
துபாய் அரசாங்கத் துறைகளில் பணிபுரியும் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் ஈத் அல் பித்ர் பண்டிகையை முன்னிட்டு ஏப்ரல் 30 தொடங்கி மே 8 வரை சுமார் 9 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொது விடுமுறை:
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (UAE) ஒவ்வொரு ஆண்டும் ஈத் அல் பித்ர் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு ஈத் அல் பித்ர் பண்டிகையை கொண்டாடும் விதமாக அனைத்து பொதுத்துறை மற்றும் அரசுத்துறை ஊழியர்களுக்கு சுமார் 9 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையானது ஏப்ரல் 30ம் தேதி முதல் மே 8 வரை வரை கடைபிடிக்கப்படும் எனவும் விடுமுறை முடிந்தவுடன் உத்தியோகபூர்வ பணிகள் மே 9 முதல் மீண்டும் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு – இதை செய்தால் புதிய அட்டையை பெறலாம்!
அதே போல தலைநகர் அஜ்மானில் உள்ள மனிதவளத் துறை ஊழியர்களுக்கும் ஒன்பது நாட்களுக்கு ஈத் அல் பித்ர் விடுமுறைக்காக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த துறையில் உள்ள ஊழியர்களுக்கு ஈத் அல் பித்ர் பண்டிகை விடுமுறைகள் ஏப்ரல் 30 முதல் மே 8 வரை இருக்கும் என்று அதிகாரப்பூர்வ உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதே நேரத்தில் அனைத்து மத்திய அரசு நிறுவனங்களுக்கும் ஒரு வார ஈத் அல் பித்ர் விடுமுறைக்கு அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது.
Exams Daily Mobile App Download
இதற்கிடையில் துபாய் அரசாங்கத்தின் மனிதவளத் துறை பணிப்பாளர் நாயகம் அப்துல்லாஹ் அலி பின் சயீத் அல் ஃபலாசி, ஈத் அல் பித்ர் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி அதிபரான ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யானுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார். அதே போல துபாய் நாட்டின் துணைத் தலைவர், பிரதமர் மற்றும் துபாய் ஆட்சியாளர், அபுதாபியின் பட்டத்து இளவரசர் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆயுதப் படைகளின் துணைத் தளபதி ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் ஆகியோரும் ஈத் அல் பித்ர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.