மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் ரூ.2,18,200 வரை DA நிலுவை அமல் – 7வது ஊதியக் குழு தகவல்!
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு DA மற்றும் DR தொகை உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான நிலுவை தொகை இன்னும் அளிக்கப்படவில்லை. ஆனால் மத்திய அமைச்சரவை விரைவில் நிலுவை தொகைகளை அளிக்க உள்ளதாக 7வது ஊதியக் குழு தகவல் அளித்துள்ளது.
அகவிலைப்படி நிலுவை:
மத்திய அரசு கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு DA மற்றும் DR தொகை உயர்வை வழங்காமல் நிலுவையில் வைத்திருந்தது. இறுதியாக 17% ஆக இருந்த அகவிலைப்படியானது ஜூலை 2021 வரையிலான 3 தவணைகளுக்கும் சேர்த்து 11% அதிகரிக்கப்பட்டு மொத்தம் 28% அதிகரிக்கப்பட்டது. ஆனால் அடுத்து வரும் மாதங்களின் சம்பளத்தில் தான் இந்த அதிகரிப்பு இருக்கும் என்றும், நிலுவை காலத்திற்கான DA வழங்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டது. முன்னதாக மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் கொரோனா தடுப்பு பணிகளுக்காக அவர்களின் மாத சம்பளத்தை அளித்துள்ளனர்.
திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிடுவோருக்கு சூப்பர் அறிவிப்பு – இன்று தரிசன டிக்கெட் வெளியீடு!
இதனால் நிலுவை காலத்திற்கான தொகையை அரசு அளிக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். மேலும் அக்டோபர் 2021 முதல், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் DA மற்றும் DR முறையே 31% ஆக அதிகரிக்கப்பட்டது. 18 மாதங்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த DA நிலுவைத் தொகையை ஒரே தவணையில் வழங்குவதற்கு அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்தது. மத்திய அரசின் இந்த முடிவினால் பணியாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். வரும் 2022 ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வும் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசில் ரொக்கப்பணம் இல்லை – பொதுமக்கள் ஏமாற்றம்!
இந்நிலையில் மத்திய அமைச்சரவை நிலுவை தொகையை வழங்குவது குறித்து அடுத்த ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்க உள்ளது. இது தொடர்பாக 7வது ஊதியக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, முதல் நிலை ஊழியர்களுக்கு டிஏ நிலுவைத் தொகை ரூ.11,880 முதல் ரூ.37,554 வரை மாறுபடும் என்றும் நிலை 13 ஊழியர்களுக்கு டிஏ நிலுவைத் தொகை இந்த நிலுவைத் தொகை ரூ.1,44,200 முதல் ரூ.2,18,200 வரை இருக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலுவைத் தொகை வழங்கப்பட்டால் மத்திய அரசின் பல லட்சக்கணக்கான ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.