TNPSC ரூ.75900 சம்பளத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு – 42 காலிப்பணியிடங்கள்! உடனே விண்ணப்பியுங்கள்!
தமிழகத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் பல்வேறு வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது குரூப் VIIB பணியிடத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகளை பற்றி விரிவாக பார்ப்போம்.
வேலைவாய்ப்பு
தமிழகத்தில் கொரோனா பரவல் பரவல் காரணமாக அனைத்து போட்டித்தேர்வுகளும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதை தொடர்ந்து தற்போது போட்டித்தேர்வுக்கான அறிவிப்பு ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகிக் கொண்டிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது குரூப் VIIB பணியிடத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணியில் விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
தமிழகத்தில் நாளை (ஜூன் 2) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்சார வாரியம் அறிவிப்பு!
இப்பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதார்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் கலை அல்லது அறிவியல் அல்லது வணிகத்தில் பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சமாக 25 வயதுடையவராக இருக்க வேண்டும். இப்பணியில் நியமிக்கப்படுபவர்களுக்கு ரூ.20,600 முதல் ரூ.75900 வரை மாத சம்பளமாக வழங்கப்படுகிறது. இதற்கு தகுதியான நபர்கள் எழுத்து தேர்வு, நேரடி தேர்வு ஆகியவற்றின் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இதற்கான எழுத்து தேர்வு வருகிற செப்டம்பர் 10ம் தேதி அன்று நடைபெற உள்ளது.
Exams Daily Mobile App Download
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் ஆன்லைன் வாயிலாக www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.in என்ற இணையதள முகவரிக்கு சென்று வருகிற ஜூன் 17ம் தேதிக்குள் விண்ணப்பித்து முடித்திருக்க வேண்டும். இதற்கு விண்ணப்பிக்க ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும். அத்துடன் நிரந்தர பதிவு வைத்திருக்காதவர்கள் ரூ.150 செலுத்த வேண்டியிருக்கும். மேலும் இது தொடர்பான கூடுதல் தகவல்களை பெற விரும்புவர்கள் TNPSCயின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.