தமிழகத்தில் நாளை (ஜூன் 2) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்சார வாரியம் அறிவிப்பு!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சரலூர் பகுதியில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (ஜூன் 2) மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது. மேலும் மின் தடை செய்யப்படும் பகுதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை:
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள துணை மின் நிலையங்களில் மாதந்தோறும் மின் ஊழியர்கள் மூலம் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பராமரிப்பு பணிகள் மூலம் மின் இணைப்புகளில் உள்ள குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு வருகிறது. மின் கம்பிகள் மாற்றுதல், வீதிகளில் செல்லும் மின் வயர்களை சரி செய்தல் மின் விநியோகத்திற்கு தடையாக உள்ளவைகளை கண்டறிந்து அகற்றுதல், மின் வயர்களின் குறுக்கே செல்லும் மரக்கிளைகளை வெட்டுதல் போன்ற பணிகள் பராமரிப்பின் போது நடைபெற்று வருகிறது.
EPFO கணக்கு வைத்திருப்போருக்கான முக்கிய அறிவிப்பு – நாமினிகளை சேர்ப்பது எப்படி?
மின் ஊழியர்கள் பாதுகாப்பிற்காகவும், மின் நுகர்வோர் பாதுகாப்பிற்காகவும் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் முடிவடையும் வரை மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. இதனை அறிந்து மின் பயனர்கள் முன் கூட்டியே மின் சார்ந்த பாதைகளை முடித்து விடுகின்றனர். மற்ற மாவட்டங்களை தொடர்ந்து நாளை கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் சரலூர் பகுதியில் மின்தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாகர்கோவில் மீனாட்சிபுரம் துணை மின் நிலையத்திலிருந்து மின்னூட்டம் பெறும் கணேசபுரம் பீடரில் உயா் அழுத்த மின் பாதையிலிருந்து கல்லூரி சாலை போக்குவரத்து எதிரே மின்மாற்றி, மாற்றியமைக்கும் பணி நடைபெற உள்ளது.
Exams Daily Mobile App Download
அதனால் நாளை (ஜூன் 2) எம்.ஜி.ஆா். நகா், வி.ஐ.பி.ஜிம் தெரு, சரலூா், போக்குவரத்து பணிமனை பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.