தனியார் துறை வேலைவாய்ப்பில் உள்ளூர் இளைஞர்களுக்கு 75% இட ஒதுக்கீடு – அரசு அறிவிப்பு!
கடந்த மார்ச் மாதத்தில் நடைபெற்ற சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்ட ஜார்கண்ட் மாநில வேலைவாய்ப்பு மசோதாவில் தற்போது சில திருத்தங்கள் செய்யப்பட்டு, தனியார் துறை வேலைவாய்ப்பில் 75% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலை வாய்ப்புகள்
ஜார்கண்ட் மாநிலத்தில் செயல்பட்டு வரும் தனியாருக்கு சம்பந்தமான அனைத்து துறைகளிலும் 75% இட ஒதுக்கீட்டை வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக உள்ளூர்வாசிகளுக்கான புதிய வேலை வாய்ப்புகளை அதிகரிப்பது தொடர்பான ஜார்க்கண்ட் மாநில வேலைவாய்ப்பு மசோதா, கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை செயல்படுத்துவது தொடர்பாக உரிய ஆய்வுகளை மேற்கொள்ள சட்டசபையில் தேர்ந்தெடுக்கப்பட்ட குழு ஒன்று ஏற்படுத்தப்பட்டது.
தமிழகத்தில் பொது இடங்களில் விநாயகர் சிலை வழிபாடு – வழக்கு தள்ளுபடி!
தற்போது மாநில வேலைவாய்ப்பு மசோதாவில் சில மாற்றங்களை செய்துள்ள இக்குழு தனியார் துறைகளில் மாதத்திற்கு ரூ.40,000 ஊதியத்துடன் வேலைவாய்ப்புகளை உருவாக்க அனுமதித்துள்ளது. தற்போது ஜார்கண்ட் மாநில இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளில் மாற்றங்களை செய்துள்ள ஆய்வு குழுவிற்கு மாநில தொழிலாளர் அமைச்சர் சத்யானந்த் போக்தா தலைமை தாங்கினார். அதன் படி, தற்போது திருத்தப்பட்ட மசோதாவில் ‘தனியார் துறை’ என்ற வார்த்தைகள் ‘தனியார் துறை மசோதாவில் உள்ள உள்ளூர் மக்களுக்கு ஜார்கண்ட் மாநில வேலைவாய்ப்பு 2021’ என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய திருத்தங்கள் சம்பள வரம்பை ரூ.30,000 லிருந்து ரூ.40,000 ஆக உயர்த்தியுள்ளது.
மேலும் பொதுத்துறை நிறுவனங்களையும் இந்த சட்டத்தின் கீழ் கொண்டு வந்த குழு அதனுடன் ஒரு புதிய உட்பிரிவை சேர்த்துள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் வேலைவாய்ப்புகளுக்கான புதிய சட்டம் அறிவிக்கப்பட்டவுடன், தனியார் துறையில் உள்ளூர் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு செய்யும் சட்டத்தை இயற்றிய நாட்டின் மூன்றாவது மாநிலமாக மாறும் என தெரிகிறது. இது போன்றதொரு சட்டம் ஏற்கனவே ஆந்திரா மற்றும் ஹரியானா மாநிலத்தில் இயற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜார்கண்டில் அமல்படுத்தப்பட இருக்கும் இந்த புதிய சட்டத்துக்கு பாஜக சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் சுகாதார அமைச்சருமான ராம்சந்திர சந்தர்வன்ஷி அனுமதி அளித்ததாக CPI சட்டமன்ற உறுப்பினர் பினோத் சிங் குறிப்பிட்டுள்ளார். இப்புதிய சட்டம் இடம்பெயர்ந்தவர்கள் அல்லது சமூகக்குழுக்கள் உட்பட எந்தவொரு பாதிக்கப்படக்கூடிய குழுக்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்பது கூடுதல் தகவல். மேலும் திருத்தப்பட்ட மசோதா, கண்காணிப்பு குழுவை செயல்படுத்துவதற்கும், புகார்களை நிவர்த்தி செய்வதற்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சாதியை ஒழிக்க அரசின் புதிய முயற்சி – ரூ.10 லட்சம் பரிசுத்தொகை! முதல்வர் அறிவிப்பு!
அதன் மூலம் மாவட்ட துணை கமிஷனர்கள், உள்ளூர் எம்எல்ஏக்கள், வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் துறை அதிகாரிகள் பிரச்சனைகளை கையாளுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய சட்டம் தொடர்பாக ஜார்க்கண்ட் மாநிலத்தின் வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் தலைவர் பிரவீன் சாப்ரா கூறுகையில், மாநிலத்தின் அடித்தட்டு பகுதியில் உள்ள பணியாளர்கள் பெரும்பான்மையாக உள்ளூர் மக்களாக இருப்பதால் புதிய சட்டத்தை அமல்படுத்துவது கடினமாக இருக்காது என்று குறிப்பிட்டுள்ளார்.