தமிழகத்தில் பொது இடங்களில் விநாயகர் சிலை வழிபாடு – வழக்கு தள்ளுபடி!
தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தியின் போது சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபட அனுமதி மறுக்கப்பட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
விநாயகர் சதுர்த்தி:
நாடு முழுவதும் கொரோனா தாக்கம் தீவிரமாக பரவியது. முதல் மற்றும் இரண்டாம் அலை என கொரோனா கோரத்தாண்டவம் ஆடியது. முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் மூலம் நோய் பரவும் விகிதம் கட்டுப்படுத்தப்பட்டது. இதன் விளைவாக தொடர்ந்து ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் பொதுமக்கள் அதிகமாக கூடும் பகுதிகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சாதியை ஒழிக்க அரசின் புதிய முயற்சி – ரூ.10 லட்சம் பரிசுத்தொகை! முதல்வர் அறிவிப்பு!
தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாட்டத்திற்கான முன் ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் வரும் 15 ஆம் தேதி வரை அனைத்து மத வழிபாட்டு நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. எனவே விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் விநாயகர் சிலை நிறுவுவதற்கும், சிலைகளை ஊர்வலமாக எடுத்து செல்வதற்கும், நீர்நிலைகளில் சிலைகளை கரைப்பதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் செப்.12 வரை மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்!
இது குறித்து பாஜக, இந்து முன்னணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அதனை தொடர்ந்து தமிழ்நாடு அரசின் உத்தரவை எதிர்த்து திருவள்ளூரை சேர்ந்த இல.கணபதி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் ஆதிகேசவலு கொரோனா காலத்தில் பொது நலனை கருத்தில் கொண்டு கட்டுப்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தமிழ்நாடு அரசின் உத்தரவில் நீதிமன்றம் தலையிட முடியாது எனவும் கூறியுள்ளனர். அதனை தொடர்ந்து நீதிமன்றம் கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.