தமிழகத்தில் சாதியை ஒழிக்க அரசின் புதிய முயற்சி – ரூ.10 லட்சம் பரிசுத்தொகை! முதல்வர் அறிவிப்பு!
தமிழகத்தில் சாதியை ஒழிக்க முன் மாதிரியாக விளங்கும் கிராமங்களுக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக 10 இலட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.
அரசு பரிசுத்தொகை:
தமிழகத்தில் ஆண்டாண்டு காலமாக சமுதாயத்தில் சாதி வைத்து பல பிரச்சனைகள் உருவாக்கி வருகிறது. இதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. ஆனாலும் இது போன்ற பிரச்சனைகள் ஓய்ந்தபாடில்லை. தற்போது தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு சாதியை ஒழிக்கும் முயற்சியாகயும் அனைவருக்கும் சம உரிமையை ஏற்படுத்தும் நோக்கில் கோயில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று அறிவித்துள்ளது. இந்த திட்டம் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழகத்தில் செப்.12 வரை மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்!
அதனை தொடர்ந்து தற்போது தமிழகத்தில் சாதி பிரிவினைகள் இருக்க கூடாது என்பதில் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக விளங்கும் கிராமங்களுக்கு ஊக்கத் தொகையாக வளர்ச்சி பணிகளை செயல்படுத்த அரசு சார்பில் 10 லட்சம் ரூபாய் பரிசுத்தொகையாக வழங்கப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். மாநில அளவில் ஆதி திராவிடர்கள், பழங்குடியினர் ஆகியோருடைய சட்டபூர்வமான உரிமைகளைப் பாதுகாக்கவும், அவர்களுடைய முக்கியமான பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் தமிழ்நாடு ஆதிதிராவிடர் – பழங்குடியினர் நல ஆணையம் என்கிற புதிய அமைப்பு உருவாக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
கழிவுகளை அகற்ற மனிதர்களை பயன்படுத்த தடை – நீதிமன்றம் அதிரடி!
மேலும் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் தொகையானது குறைந்தபட்சம் ரூ.1 லட்சமாக அதிகரிக்கப்படும். தமிழ்நாட்டு மக்களின் மனதில் மடை மாற்றத்தை ஏற்படுத்தி, நாம் அனைவரும் சமம் என்பதை உணர்த்தி திருவள்ளுவரின் ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற குரலுக்கு ஏற்ப சாதி வேறுபாடின்றி தமிழக மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்று முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார்.