தமிழகத்தில் ஆயுள் தண்டனை கைதிகள் 700 பேர் அண்ணா பிறந்தநாளில் விடுதலை – முதல்வர் அறிவிப்பு!
தமிழகத்தில் உள்ள சிறை கைதிகளில் 700 பேரை அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15ம் தேதி அன்று விடுதலை செய்ய இருப்பதாக முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
முதல்வரின் அறிவிப்பு:
தமிழக சிறைகளில் ஆயுள் கைதிகளாக இருக்கும் நபர்களை அவர்களின் நன்னடத்தையின் அடிப்படையில் ஆண்டுதோறும் விடுதலை செய்யப்படுவார்கள். தமிழக அரசு இதற்காக கைதிகளின் நடத்தை அறிக்கைகளை ஆய்வு செய்து நபர்களை தேர்வு செய்வது வழக்கம். தங்களின் வாழ்நாள் முழுவதும் சிறை கைதிகளாக தண்டனையில் இருக்க நேரிடும் என்று வருந்தும் கைதிகளுக்கு அரசின் இந்த செயலினால் மீண்டும் நல்வாழ்வு தொடங்க வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி மாற்றம்? BCCI விளக்கம்!
அந்த வகையில், தமிழகத்தில் இன்று சட்டப்பேரவையின் இறுதிநாள் கூட்டம் நடைபெற்றது. கடந்த மாதம் முதல் தனித்தனியாக துறை வாரியான மானிய கோரிக்கை விளக்க கூட்டம் நடந்து வருகின்றது. அனைத்து துறை தலைவர்களும் புதிய திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்தும், எதிர்க்கட்சியினரின் கேள்விகளுக்கு பதில் அளித்தும் வருகின்றனர். இன்று காவல்துறை மானிய கோரிக்கையின் மீதான விவாதம் நடந்தது. அப்போது பல கேள்விகள் எழுப்பப்பட்டது.
தமிழக கடைகள், நிறுவனங்களில் உள்ள ஊழியர்களுக்கு இருக்கை – மசோதா நிறைவேற்றம்!
இந்த கேள்விகளுக்கு சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் பதில் அளித்தார். அப்போது, செப்டம்பர் 15ம் தேதி அண்ணா பிறந்தநாளையொட்டி ஆயுள் தண்டனை கைதிகள் 700 பேர் விடுதலை செய்யப்பட உள்ளனர் என்று அறிவித்தார். காவல்துறை தொடர்பான பல அறிவிப்புகளையும் வெளியிட்டார். மேலும், 700 கைதிகளை விடுவிப்பதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.