இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி மாற்றம்? BCCI விளக்கம்!
இந்தியா கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்து வரும் விராட் கோஹ்லி தொடர்ந்து அப்பதவியில் நீடிப்பார் என பிசிசிஐ விளக்கம் அளித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி:
இந்திய கிரிக்கெட் அணிக்கு மூன்று விதமான போட்டிகளிலும் விராட் கோஹ்லி கேப்டனாக இருந்து வருகிறார். இந்த சூழலில் அவர் தனது ஒருநாள் மற்றும் இருபது ஓவர் அணிகளின் கேப்டன் பதவியை துறக்கவுள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின. அண்மை காலமாக தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் தடுமாறி வருகிறார் விராட் கோஹ்லி.
தமிழக கடைகள், நிறுவனங்களில் உள்ள ஊழியர்களுக்கு இருக்கை – மசோதா நிறைவேற்றம்!
அதனால் தனது பேட்டிங்கில் கவனம் செலுத்துவதற்காக ஒருநாள் மற்றும் இருபது ஓவர் அணிகளின் கேப்டன் பொறுப்பினை விட்டு விலக உள்ளதாகவும், கேப்டன்சியை விட்டு விலகும் தனது முடிவு குறித்து விராட் கோலி, ரோகித் ஷர்மாவிடமும் இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகத்திடமும் ஆலோசனை நடத்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும், அக்டோபரில் தொடங்கவிருக்கும் டி 20 உலகக்கோப்பைக்கு பிறகு விராட் கோஹ்லி தனது ஒருநாள் மற்றும் இருபது ஓவர் அணிகளின் கேப்டன் பதவியை விட்டு விலகுவார் என்றும், இது குறித்த அறிவிப்பை விராட் கோஹ்லியே வரும் மாதங்களில் வெளியிடுவார் எனவும் கூறப்பட்டது.
இந்தியாவில் மீண்டும் துவங்கும் ஜெட் ஏர்வேஸ் விமான சேவை – ஆட்சேர்ப்பு பணிகள் தீவிரம்!
இந்நிலையில் கோஹ்லி கேப்டன் பதவியிலிருந்து விலகுவது தொடர்பான வதந்தியை பிசிசிஐ மறுத்துள்ளது. இது குறித்து பிசிசிஐயின் பொருளாளர் அருண் துமால் கூறுகையில், இவையெல்லாம் அபத்தமானவை. அப்படியெல்லாம் எதுவும் நடக்கவில்லை. ஊடகங்களில் மட்டுமே இவை விவாதிக்கப்பட்டு வருகின்றன. டெஸ்ட் மற்றும் ஒருநாள், டி20 அணிகளுக்கு தனித்தனி கேப்டன்களை நியமிப்பது பற்றி பிசிசிஐ விவாதிக்கவில்லை. எல்லாவிதமான போட்டிகளிலும் விராட் கோஹ்லியே கேப்டனாக நீடிப்பார் என்று விளக்கம் அளித்துள்ளார். இந்த செய்தியை கேட்ட ரசிகர்கள் தற்போது நிம்மதி அடைந்துள்ளனர்.