தமிழக கடைகள், நிறுவனங்களில் உள்ள ஊழியர்களுக்கு இருக்கை – மசோதா நிறைவேற்றம்!
தமிழகத்தில் கடைகள், நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இருக்கை வழங்கும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இருக்கை வழங்கும் மசோதா:
தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு பதவியேற்ற நாள் முதல் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது நடைபெற்று வரும் துறைவாரியான மானிய கோரிக்கைகளில் அமைச்சர்கள் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். கோயில்களில் மொட்டையடிக்க கட்டணமில்லை. சாதியை ஒழிக்க முன்மாதிரியாக விளங்கும் கிராமங்களுக்கு ஊக்கத்தொகை, இதழியலாளர்களுக்கு தமிழக அரசு சார்பாக கலைஞர் எழுதுகோல் விருது, மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு போன்ற அறிவிப்புகள் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்தியாவில் மீண்டும் துவங்கும் ஜெட் ஏர்வேஸ் விமான சேவை – ஆட்சேர்ப்பு பணிகள் தீவிரம்!
அதனை தொடர்ந்து இன்று சட்டப்பேரவையில் கடைகள், நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இருக்கை வழங்கும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. நகைக்கடைகள், துணிக்கடைகள் மற்ற சில வணிக நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் நாள் முழுவதும் நின்று கொண்டு வேலை செய்கின்றனர். இதனால் அவர்கள் உடல் மற்றும் மன ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர். அதனால் கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் அமர இருக்கைகள் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.
குஜராத்தின் புதிய முதல்வராக பூபேந்திர படேல் பதவியேற்பு – ஆளுநர் பதவிப் பிரமாணம்!
இது குறித்து கடந்த 4 ஆம் தேதி சட்டசபையில் தொழிலாளர் நலத்துறை ஆலோசனை கூட்டத்தில் தொழிலாளர்களுக்கு இருக்கைகள் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதன் மூலம் தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பயன்பெறுவர் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று சட்டப்பேரவையில் கடைகள், நிறுவனங்களில் உள்ள ஊழியர்களுக்கு இருக்கை வழங்கும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.