நாடு முழுவதும் ஒரே நாளில் 60,753 பேருக்கு கொரோனா பாதிப்பு – 1,647 பேர் உயிரிழப்பு!!
நாடு முழுவதும் கொரோனா பரவல் தொடர்ச்சியாக 1 லட்சத்திற்கு கீழ் வந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 60,753 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 1,647 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா பாதிப்பு:
கடந்த ஆண்டு முதல் கொரோனா பரவல் காரணமாக பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனா இரண்டாம் அலையில் பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. இதனால் பல மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டன. அதன் காரணமாக கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. தினசரி பாதிப்பு 4 லட்சத்தில் இருந்து 1 லட்சத்திற்கு கீழ் தொடர்ச்சியாக பதிவாகி வருகிறது.
ஜூன் 21க்கு பின் மறு உத்தரவு வரும் வரை ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!
இருந்தபோதிலும் உயிரிழப்புகள் காரணமாக இந்த மாத இறுதி வரை ஊரடங்கை பல்வேறு மாநில அரசுகள் நீடித்துள்ளது. இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டவர்கள், உயிரிழந்தவர்கள், சிகிச்சையில் உள்ளவர்கள் குறித்த விவரங்களை வெளியிட்டு உள்ளது. அதில் நேற்று ஒரே நாளில் புதிதாக 60,753 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
TN Job “FB
Group” Join Now
அதன்படி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,98,23,546 ஆக உயர்ந்துள்ளது. மேலும் புதிதாக 1,647 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 3,85,137 ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஒரே நாளில் 97,743 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். இதனால் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 2,86,78,390 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மருத்துவமனைகளில் 7,60,019 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் 27,23,88,783 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.