ஜூன் 21க்கு பின் மறு உத்தரவு வரும் வரை ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!
கொரோனா நோய்த்தொற்று பரவல் நிலவரத்தை கருத்தில் கொண்டு மேகாலயா மாநில அரசு ஜூன் 21ம் தேதி உடன் முடிவடைய இருந்த ஊரடங்கு கட்டுப்பாடுகளை மறுஉத்தரவு வரும் வரை நீட்டிப்பதாக அறிவித்து உள்ளது. இதற்கான உத்தரவினை அம்மாநிலத்தின் தலைமை செயலர் பிறப்பித்து உள்ளார்.
ஊரடங்கு நீட்டிப்பு:
கொரோனா 2வது அலை பரவல் தீவிரமடைந்தததை தொடர்ந்து பல்வேறு மாநில அரசுகளும் ஊரடங்கு உத்தரவினை அமல்படுத்தின. இதனால் தற்போது நாடு தழுவிய பாதிப்பு எண்ணிக்கை குறையத் தொடங்கி உள்ளது. பல்வேறு மாநில அரசுகள் ஜூன் இறுதி வரை கட்டுப்பாடுகளை நீட்டித்து உள்ளன. இதனை தொடர்ந்து தற்போது மேகாலயா மாநில அரசு ஜூன் 21ம் தேதியுடன் முடிவடைய இருந்த ஊரடங்கினை மறுஉத்தரவு வரும் வரை நீட்டிக்கப்படுவதாக அறிவித்து உள்ளது.
தமிழக பேருந்துகளில் இலவச பயணத்திற்கு பல வண்ண டிக்கெட்கள் – விரைவில் அறிமுகம்!
மேகாலயாவின் தலைமை செயலாளர் எம்.எஸ்.ராவ் வெளியிட்ட அறிக்கையின் படி, COVID-19 பரவளில் இருந்து மாநிலத்தைப் பாதுகாப்பதற்காக, வெளியிடப்பட்ட கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் ஜூன் 21 இல் தொடர்ந்து மறுஉத்தரவு வரும் வரை செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. மாநிலத்தில் அதிகளவில் கொரோனா நோயாளிகள் சிகிச்சையில் உள்ளதை கருத்தில் கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
முதலமைச்சர் கான்ராட் கே சங்மா தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட மறுஆய்வுக் கூட்டத்தின் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. மேலும் 11 மாவட்டங்களில் ஒவ்வொன்றின் துணை ஆணையர்களுக்கும் அந்தந்த மாவட்டங்களில் ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக முடிவுகளை எடுக்க அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. மேகாலயாவில் இப்போது 4,819 பேர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இதுவரை 771 பேர் உயிரிழந்து உள்ளனர்.
Please mention clear topic. Why stating that “state govt” instead of megalaya govt.
Pls. Sir jewellery shop open pannunga anga tha wrk pannurom nanga anga poga 😭😭 romba kasdam sir pls open pannunga