தமிழகத்தில் 50% பயணிகளுடன் பேருந்துகள் இயக்கம் – முக ஸ்டாலின் இன்று ஆலோசனை!
தமிழகத்தில் வரும் ஜூன் 21ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடையும் நிலையில் மேலும் ஊரடங்கு நீட்டிப்பது குறித்தும் சில தளர்வுகள் அளிப்பது குறித்தும் இன்று முதல்வர் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். இதில் 50 சதவீத பயணிகளுடன் நகரப் பேருந்துகள் இயங்க அனுமதி அளிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
முதல்வர் ஆலோசனை:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மாதம் 10ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதில் கடைகள் திறக்க சில தளர்வுகள் வழங்கப்பட்டதால் பலரும் அரசின் ஊரடங்கை மதிக்காமல் வீதிகளில் வலம் வந்தனர. அதனால் மேலும் ஊரடங்கு கடும் கட்டுப்பாடுகளுடன் நீட்டிக்கப்பட்டது. முழு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. பேருந்து சேவை முற்றிலும் தடை செய்யப்பட்டது. இதனால் மக்களின் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது.
நாடு முழுவதும் ஒரே நாளில் 60,753 பேருக்கு கொரோனா பாதிப்பு – 1,647 பேர் உயிரிழப்பு!!
ஜூன் 14 முதல் ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டது. காய்கறி, மளிகை போன்ற கடைகள் மாலை 5 மணி வரை திறக்க அனுமதி வழங்கப்பட்டது. ஆட்டோ, டாக்சிகள் ஓட அனுமதிக்கப்பட்டது. சுயதொழில் செய்பவர்கள் இ-பதிவு பெற்று கொண்டு தொழிலை தொடங்கலாம் எனவும் அரசு அறிவித்தது. கொரோனா தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்களுக்கும் ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் பேருந்து போக்குவரத்து சேவை பற்றிய எந்த அறிவிப்புகளும் வெளிவரவில்லை.
TN Job “FB
Group” Join Now
தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 21 ம் தேதியுடன் முடிவடையும் நிலையில் மேலும் ஊரடங்கை நீடிப்பது குறித்தும் கூடுதல் தளர்வுகள் அளிப்பது குறித்தும் இன்று முதல்வர் முக ஸ்டாலின் மருத்துவ குழுவுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். இதில் கடைகள் திறக்கும் நேரம் அதிகரிப்பு, மேலும் சில கடைகள் திறக்க அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து பேருந்து சேவை குறித்து அறிவிக்கப்படும் எனவும் 50 சதவீத பயணிகளுடன் அரசு போக்குவரத்து சேவையை தொடங்க அரசு அனுமதி வழங்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.