நாடு முழுவதும் 60 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கம் – யூனியன் பட்ஜெட்டில் அறிவிப்பு!

0
நாடு முழுவதும் 60 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கம் - யூனியன் பட்ஜெட்டில் அறிவிப்பு!
நாடு முழுவதும் 60 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கம் - யூனியன் பட்ஜெட்டில் அறிவிப்பு!
நாடு முழுவதும் 60 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கம் – யூனியன் பட்ஜெட்டில் அறிவிப்பு!

நிதி அமைச்சக அலுவலகத்தில் மத்திய பட்ஜெட்டை இன்று நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அப்போது அவர் இந்தியா முழுவதும் 14 துறைகளில் 5 ஆண்டுகளில் 60 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று அறிவித்தார்.

முக்கிய அறிவிப்பு:

இந்திய நாடாளுமன்றத்தில் நேற்று பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையுடன் நேற்று தொடங்கியது. இந்த நிலையில் 2022-23 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் காகிதமில்லா மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 4வது பட்ஜெட் ஆகும். மேலும் இரண்டாவது ஆண்டாக காகிதமில்லா பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பிப்.15 முதல் 1 – 8ம் வகுப்புகளுக்கு மீண்டும் பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!

இந்த வகையில் டிஜிட்டல் பட்ஜெட்டை தாக்கல் செய்த பின்பு உரையாற்றிய மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியிலிருந்து, இந்தியா வெகு வேகமாக மீண்டு வருவதாகவும், கொரோனா தடுப்பூசி மூலம் தொற்று பாதிப்பு குறைந்து வருவதாகவும் அவர் கூறினார். கொரோனா எதிரொலியாக பல வேலைவாய்ப்பு இல்லாமல் தவித்தனர். எனவே இந்தியா முழுவதும் வேலைவாய்ப்பை அதிகப்படுத்தும் விதமாக, 14 துறைகளில் 5 ஆண்டுகளில் 60 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். இந்த வேலைவாய்ப்புகள் மேக் இன் இந்தியா மூலம் ஏற்படுத்தப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழக அரசு ஊழியர்களுக்கு ஷாக் – ஊதியம் பெறுவதில் சிக்கல்! ரிசர்வ் வங்கி விளக்கம்!

மேலும் அடுத்த 25 ஆண்டு கால வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கும் வகையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வகையில் 25,000 கி.மீ. தொலைவுக்கு புதிய தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்படும் மற்றும் வந்தே பாரத் திட்டம் மூலம் 400 புதிய ரயில் சேவைகள் இயக்கப்படுவதாகவும் கூறினார் . மேலும் இந்தியா முழுவதும் இயற்கை வேளாண்மை ஊக்குவிக்கப்படும்.இதனை தொடர்ந்து 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாநில மொழி கல்வி ஊக்குவிக்கப்படும் என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!