தமிழக அரசு ஊழியர்களுக்கு ஷாக் – ஊதியம் பெறுவதில் சிக்கல்! ரிசர்வ் வங்கி விளக்கம்!
இந்திய ரிசர்வ் வங்கி சர்வரில் பிரச்சனை ஏற்பட்டுள்ளதால் தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சம்பளம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இன்று மாலைக்குள் ஊதியம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊதியம்:
தமிழகத்தில் அரசு ஊழியர்கள் வெகு நாட்களாகவே அகவிலைப்படி உயர்வு வேண்டி கோரிக்கை விடுத்தது வந்தனர். இந்த நேரத்தில் கடந்த 2021 ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது தற்போதைய முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார். அதன்படி இவர் ஆட்சிக்கு வந்ததும் சட்டமன்ற மானிய கோரிக்கை விவாதத்தின் போது 2022 ஜனவரி மாதம் முதல் அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி புத்தாண்டு தொடங்கியதும் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக 31% அகவிலைப்படி உயர்த்தப்பட்டது.
பிப்ரவரி 16 முதல் தொடங்கும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் – BCCI அறிவிப்பு!
கடந்த வாரம் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 17 சதவீதத்திலிருந்து 31 சதவீதமாக உயர்த்தபட்டதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. இதனால் அரசுக்கு ஆண்டுக்கு தோராயமாக 8724 கோடி ரூபாய் செலவினம் ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக அரசு ஊழியர்களுக்கு வீட்டு வாடகைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. நகராட்சிகளில் வசிப்போருக்கு வாடகைப்படி 16% லிருந்து 18% ஆகவும், ஊரகப் பகுதிகளில் வசிப்போருக்கு 8% லிருந்து இருந்து 9% ஆகவும் வாடகைப்படி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் – அடுத்தடுத்து வெளிவரும் மோசடிகள்! குவியும் புகார்கள்!
இந்த தொகை ஜனவரி 1 ஆம் தேதி முதல் கணக்கிட்டு வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் பிப்ரவரி 1ம் தேதியான இன்று அரசு ஊழியர்களுக்கு ஊதியம் மற்றும் ஓய்வூதியத்தொகை வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தலைமை ரிசர்வ் வங்கியின் சர்வரில் பிரச்சனை ஏற்பட்டுள்ளதால் தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சம்பளம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறு உடனடியாக சரி செய்யப்பட்டு இன்று மாலைக்குள் ஊதியம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.