பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் என 6 பேருக்கு கொரோனா – முக்கிய உத்தரவு பிறப்பிப்பு!
திருப்பூர் மாவட்டத்தில் தொடர்ந்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது.
மாணவர்களுக்கு கொரோனா :
தமிழகத்தில் செப்டம்பர் 1ம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. மற்ற மாவட்டங்களை தொடர்ந்து திருப்பூர் மாவட்டத்தில் ஏற்கனவே 6 ஆசிரியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது மாணவர்கள் 4 பேர் மற்றும் 2 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து அதிகரித்து வரும் பாதிப்புகள் சுகாதாரத்துறை அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக தனியார் பள்ளி மாணவர்கள் 13 பேருக்கு கொரோனா அறிகுறி – பெற்றோர்கள் அச்சம்!
பல்லடம் சாமளாபுரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 2 ஆசிரியர்கள் மற்றும் 2 மாணவர்களுக்கு மொத்தம் 4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ஆய்வு மேற்கொண்ட போது அப்பள்ளியில் பயிலும் மாணவர் ஒருவரின் பெற்றோருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அதனால் அப்பள்ளியில் பயிலும் மற்ற மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 3 மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
அக்.17ம் தேதி புதிய IPL அணிகளுக்கான ஏலம் – பிசிசிஐ அறிக்கை!
தொற்று பாதிப்பை கருத்தில் கொண்டு 3 நாட்கள் பள்ளி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது திருப்பூர் கொங்கு மெயின் ரோட்டில் உள்ள சின்னசாமி அம்மாள் பள்ளியில் 12 வகுப்பு மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதேப்போல் தாராபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஆசிரியை ஒருவருக்கும் தொற்று உறுதியானது. பாதிப்புக்குள்ளான அனைவரும் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பின் அது குறித்த விவரங்களை திரட்ட கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.