தமிழக தனியார் பள்ளி மாணவர்கள் 13 பேருக்கு கொரோனா அறிகுறி – பெற்றோர்கள் அச்சம்!
தமிழகத்தில் செப்டம்பர் 1ம் தேதி முதல் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பள்ளிகள் திறக்கப்பட்டது. தனியார் பள்ளியில் பயின்று வரும் 13 மாணவர்களுக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
கொரோனா:
நாடு முழுவதும் கொரோனா தாக்கம் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. முதல் மற்றும் இரண்டாம் அலை என உருமாறி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து நாளுக்கு நாள் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்றும் இறப்பு விகிதம் அதிகரித்து வந்தது. நோய் பரவும் விகிதம் மற்றும் இறப்பு விகிதத்தை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது.
அக்.17ம் தேதி புதிய IPL அணிகளுக்கான ஏலம் – பிசிசிஐ அறிக்கை!
அதனை தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு ஆன்லைன் மூலம் படங்கள் நடத்தப்பட்டது. ஆன்லைன் வகுப்புகள் மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு திருப்தி அளிக்காத காரணத்தால் பள்ளிகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. தமிழகத்தில் செப்டம்பர் 1ம் தேதி முதல் 9, 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு சுழற்சி முறையில் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது பள்ளிகள் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இயங்கி வரும் நிலையில் தமிழகத்தில் சில மாவட்டங்களில் உள்ள பள்ளி மாணவர்கள் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
செப்.20ம் தேதி 1 முதல் 5ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – மாநில அரசு!
மேலும் பள்ளிகளில் மாணவர்கள் விடுதிகளில் தங்குவதனால் நோய் தொற்று பரவ வாய்ப்பு அதிகமாக இருப்பதாக கூறப்பட்டது.இந்நிலையில் துறையூரில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி பயின்று வரும் 13 மாணவர்களுக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதாக கூறப்படுகிறது. அவர்களில் ஒரு மாணவர் சொந்த ஊருக்குச் சென்று பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், பள்ளி விடுதியில் தங்கியுள்ள மீதமுள்ள மாணவர்களுக்கும் உரிய பரிசோதனை மேற்கொண்டு சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.