செப்.20ம் தேதி 1 முதல் 5ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – மாநில அரசு!

0
செப்.20ம் தேதி 1 முதல் 5ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு - மாநில அரசு!
செப்.20ம் தேதி 1 முதல் 5ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு - மாநில அரசு!
செப்.20ம் தேதி 1 முதல் 5ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – மாநில அரசு!

மத்தியப் பிரதேச மாநிலத்தில் வரும் 20 ஆம் தேதி முதல் 1 லிருந்து 5 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு 50% வருகையுடன் கூடிய சுழற்சி முறையில் பள்ளிகளை திறக்க அரசு முடிவு செய்துள்ளதாக கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பள்ளிகள் திறப்பு

மத்தியப் பிரதேச மாநிலத்தில் தற்போதுள்ள கொரோனா தொற்று நிலவரத்தை ஆய்வு செய்த அரசு, 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு செப்டம்பர் 20 ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்க முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பள்ளிகளை திறப்பது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பின் கீழ், ‘மாநிலம் முழுவதும் 50% மாணவர்கள் வருகையுடன் பள்ளிகளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் செப்.15ம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

அந்த வகையில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை திறக்கும் போது முறையான கொரோனா தடுப்பு நெறிமுறையை பின்பற்றுமாறு பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் சமூக இடைவெளி, கை சுத்திகரிப்பு ஆகியவை முறையாக செயல்படுத்தப்பட வேண்டும். குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர் விரும்பவில்லை என்னும் பட்சத்தில் பள்ளி நிர்வாகம் ஆன்லைன் வகுப்புகளைத் தொடர வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர 8, 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான விடுதிகள் மற்றும் பள்ளிகள் 100% திறனுடன் திறக்கப்படும் என்றும், 11 ஆம் வகுப்புகளுக்கு 50% திறனுடன் வகுப்புகள் நடத்தப்படும் என்றும் பள்ளிக்கல்வி அமைச்சர் இந்தர் சிங் பர்மார் கூறியுள்ளார். இதனிடையே அனைத்து பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசிகளை எடுத்திருக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக, மத்தியப் பிரதேச மாநிலத்தில் செப்டம்பர் 1 முதல் 8 ஆம் வகுப்பு முதல் 12 வரையுள்ள வகுப்புகளுக்கு பள்ளிகள் தொடங்கியது.

தடுப்பூசி செலுத்தாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல தடை – அரசு அறிவிப்பு!

தொடர்ந்து நாளை (செப்டம்பர் 15) முதல் 50% திறனுடன் கல்லூரிகளை திறக்க உயர்கல்வி துறை அனுமதி அளித்துள்ளது. இதனுடன் அம்மாநிலத்தில் நேர்மறை விகிதம் குறைந்த பெரும்பாலான மாவட்டங்களில் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. மத்திய பிரதேசத்தில், தற்போது வரை 131 வழக்குகள் மட்டும் செயலில் இருப்பதாகவும், நேற்று (செப்டம்பர் 14) ஒரு நாளில் 12 பேருக்கு மட்டுமே நோய் தொற்று பதிவாகி இருப்பதாக சுகாதார அமைச்சகம் தகவல் அளித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!