வாகன கடன் தவணைக்கு (EMI) 6 மாத கால அவகாசம்? ஜூன் 28 இல் லாரி ஸ்டிரைக்!
இந்தியாவில் உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலையை கண்டித்து மற்றும் வாகன கடன் தவணைக்கு 6 மாத காலம் அவகாசம் வழங்க கோரியும் வரும் ஜூன் 28ம் தேதி நாடு முழுவதும் லாரிகள் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்த அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
லாரிகள் வேலை நிறுத்தம்:
இந்தியாவில் சமீப காலமாக பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. பல மாநிலங்களில் பெட்ரோல் விலை சதம் அடித்துள்ளது. கடந்த வருட மார்ச் இறுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த எண்ணெய் நிறுவனங்கள், தற்போது, அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன. டீசல் விலையும் தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. இன்றைய நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் 98.14 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 92.31 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தமிழக தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு ரூ.5000 நிவாரணம் – அரசிடம் கோரிக்கை!!
இந்த விலை உயர்வால் பொதுமக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். வாகன ஓட்டிகள் விலை உயர்வால் வருமானம் இழந்துள்ளதாக கூறுகின்றனர். போக்குவரத்து தொழிலை சார்ந்தோர் பெட்ரோல், டீசல் உயர்வால் தொழிலை தொடர முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என கவலை தெரிவிக்கின்றனர். அதிகரித்து வரும் டீசல் விலை உயர்வை குறைக்க வேண்டி அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் ஜூன் 28ம் தேதி பிரதமர் மற்றும் மத்திய – மாநில போக்குவரத்து துறை அமைச்சர்களிடம் கோரிக்கை வைக்க உள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்த கோரிக்கை மனுவில், வாகன கடன் தவணைக்கு, ஆறு மாத அவகாசம் வழங்க வேண்டும் எனவும் ஆர்.டி.ஓ., மற்றும் ஜி.எஸ்.டி., அலுவலர்களின் ஊழலை தடுக்க வேண்டும். மேலும் நாடு முழுவதும் ஒரே விலை, விலை மாற்றத்தை, ஒரு மாதம் அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறையும் நிர்ணயிக்க வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர். மேலும் ஜூன் 28ம் தேதி டீசல் விலை உயர்வை எதிர்த்து லாரிகள் ஒருநாள் லாரிகள் வேலை நிறுத்தம் செய்ய திட்டமிட்டுள்ளோம். கோரிக்கைக்கு மத்திய அரசு ஜூலை 28க்குள் தீர்வு காண வேண்டும் இல்லை எனில் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்யப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டு உள்ளது.