தமிழக தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு ரூ.5000 நிவாரணம் – அரசிடம் கோரிக்கை!!
தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளி ஆசிரியர்களின் வாழ்வாதாரம் கொரோனா காரணமாக விதிக்கப்பட்டு உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு ரூ.5000 நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
கொரோனா நிவாரணம்:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இருந்த போதிலும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு எந்த குறைப்பும் இல்லாமல் மாத ஊதியம் வழங்கப்படுகிறது. ஆனால் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு முறையான ஊதியம் வழங்காமல் அவர்களது வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்களுக்கு போதிய நிவாரணம் வழங்க அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
தமிழக மருத்துவ துறையில் அவுட்சோர்சிங் பணியாளர் நியமனம் – அமைச்சர் விளக்கம்!
மாநிலம் முழுவதும் மொத்தமாக 22,000 தனியார் பள்ளிகள் செயல்படுகின்றன. அதில் 3 லட்சம் ஆசியர்கள், 2 லட்சம் பேர் ஓட்டுநர்கள், உதவியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஆனால் கொரோனா பரவல் காரணமாக அவர்களது வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டாலும் அதில் குறைவான மாணவர்களே கலந்து கொள்கின்றனர்.
TN Job “FB Group” Join Now
இதனால் பலர் கல்விக்கட்டணம் செலுத்தாமல் உள்ளனர். இதனால் அரசு தரப்பில் பாதிக்கப்பட்ட தனியார் பள்ளி பணியாளர்களுக்கு ரூ.5000 நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆன்லைன் மூலமாக வகுப்பு எடுக்கும் ஆசிரியர்களுக்கு 50% சம்பளம் வழங்கப்படுகிறது. மற்ற ஆசிரியர்களுக்கு அதுபோல எந்த ஊதியமும் வழங்கப்படவில்லை. இதனால் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.