55,000 வரை வேலைவாய்ப்பு.. ஊழியர்களுக்கு காத்திருக்கும் அட்டகாசமான வசதிகள் – நிறுவனத்தின் அறிவிப்பு!
தமிழகத்தில் ஐபோன் தயாரிப்பு பணிகளை தடையில்லாமல் மேற்கொள்ள வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. அதனால் இந்நிறுவனம் 60,000 பணியாளர்களை பணி அமர்த்த திட்டமிட்டுள்ளது. மேலும் இந்த ஊழியர்களுக்கு சில சலுகைகளையும் வழங்க திட்டமிட்டுள்ளது.
வேலைவாய்ப்பு
தமிழகத்தில் செயல்பட்டு கொண்டிருக்கும் தைவான் நிறுவனமான ஃபாக்ஸ்கான் நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் ஐபோன் 14 மாடல் உள்பட பல்வேறு மாடல் ஐபோன்களை உற்பத்தி செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் ஐபோன் தயாரிப்பு பணிகளை எந்தவொரு தடையில்லாமல் மேற்கொள்ள வேண்டும் என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்காக 60,000 பணியாளர்களை பணியில் அமர்த்த முடிவு செய்துள்ளது.
Follow our Instagram for more Latest Updates
இதனை தொடர்ந்து தற்போது ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தொழிற்சாலையில் 15,000 பணியாளர்கள் வரை பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து 55,000 பணியாளர்கள் வரை பணியில் அமர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதனால் ஸ்ரீபெரும்புதூரின் வளாகத்தை விரிவுபடுத்தும் பணிகளை இந்நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
தமிழகத்தில் 4 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை அறிக்கை!
Exams Daily Mobile App Download
அத்துடன் புதியதாக பணியில் அமர்த்தப்படும் ஊழியர்களுக்கு சில சலுகைகளையும் வழங்க உள்ளது. அதாவது, பணியாளர்களுக்கு தங்கும் விடுதிகள், மருத்துவ வசதிகள் உள்ளிட்ட பல சலுகைகளை வழங்க உள்ளதாக இந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் சென்னை அருகே 20 ஏக்கர் பரப்பில் ஊழியர்களுக்காக தங்கும் விடுதிகள், வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.