தமிழகத்தில் 4 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை அறிக்கை!

0
தமிழகத்தில் 4 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் - வானிலை அறிக்கை!
தமிழகத்தில் 4 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் - வானிலை அறிக்கை!
தமிழகத்தில் 4 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை அறிக்கை!

தமிழகம் மற்றும் புதுவையில் வரும் டிச. 20ம் தேதி வரை மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. அத்துடன் வட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வானிலை தகவல்:

கிழக்கு திசை காற்றின்‌ வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று முதல் (16.12.2022) டிச.18ம் தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.
அதே போல டிச. 19ம் தேதி தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள்‌, புதுவை உள்ளிட்ட பகுதிகளில்‌ அநேக இடங்களில் லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌ என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

Follow our Instagram for more Latest Updates

அதனை தொடர்ந்து டிச.20 அன்று தமிழகத்தின் இராமநாதபுரம்‌, புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர்‌, மயிலாடுதுறை, கடலூர்‌, திருவாரூர்‌, நாகப்பட்டினம்‌ ஆகிய மாவட்டங்கள்‌ மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்யவாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேக மூட்டத்துடன்‌ காணப்படும்‌. அதிகபட்ச வெப்பநிலை 30 – 31 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌ என அறிவிக்கப்ட்டுள்ளது.

அதிகரிக்கும் பறவைக் காய்ச்சல் பாதிப்பு – தமிழக எல்லைகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரம்!

Exams Daily Mobile App Download
மீனவர்களுக்கான எச்சரிக்கை:

தெற்கு அந்தமான்‌ கடல்‌ பகுதிகள்‌ & தெற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில் இன்றும் நாளையும் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல்‌ 45 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ இடையிடையே 55 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ காலை வரை வீசக்கூடும்‌. அதே போல இலங்கை கடலோரப்பகுதிகளை ஓட்டிய தென் மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகள்‌, மன்னார்‌ வளைகுடா மற்றும்‌ குமரிக்கடல்‌ பகுதிகளில் 20ம் தேதி வரை சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 45 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ இடையிடையே 55 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ காலை வரை வீசக்கூடும்‌. அதனால் மீனவர்கள் இப்பதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!