அதிகரிக்கும் பறவைக் காய்ச்சல் பாதிப்பு – தமிழக எல்லைகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரம்!
தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு கறிக்கோழி, முட்டை மற்றும் கோழித்தீவனங்கள் ஆகியவை கொண்டு செல்லப்பட்டு வரும் நிலையில், கேரள மாநிலம் கோட்டயத்தில் பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் தமிழக-கேரள எல்லைகளில் சோதனை முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.
பறவை காய்ச்சல்:
தமிழகத்தில் திருப்பூர் மாவட்டம் பல்லடம், தாராபுரம், உடுமலை ஆகிய பகுதிகளில் இருந்து கோழி, முட்டை, மற்றும் கோழித் தீவனங்கள் ஆகியவை கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அது மட்டுமில்லாமல் கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வாத்துகள் கொண்டு வரப்படுகின்றன. இந்நிலையில் கடந்த சில நாட்களாக கேரளாவில் பறவை காய்ச்சல் பாதிப்பு அதிகமாக பரவி வருவதாக தகவல் வெளியானது. இந்நிலையில் தமிழக-கேரள எல்லையான திருப்பூர் மாவட்டம் உடுமலை-மூணார் சாலையில் சோதனை முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
மேலும் அந்த முகாம்களில் கால்நடை மருத்துவர்கள் அமர்த்தப்பட்டு அவர்கள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர். மேலும் 9/6 செக்போஸ்ட் மற்றும் சின்னார் பகுதியில் சோதனைச்சாவடி அமைத்து கேரளாவில் இருந்து வரும் வாகனங்களில் மருந்துகள் தெளிக்கப்பட்டு அனுமதிக்கப்படுகின்றன. இது குறித்து கால்நடை அதிகாரிகள் கூறுகையில், கேரளாவில் கோட்டயம் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக பறவை காய்ச்சல் பரவி வந்தது.
விவசாயிகளுக்கு ரூ.5,439 கோடி ரூபாய் பயிர் காப்பீடு தொகை ஒதுக்கீடு – மாநில அரசு அறிவிப்பு!
Exams Daily Mobile App Download
ஆனால் அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பரவல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் தற்போது மழை பனி காரணமாக மீண்டும் பறவை காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதனால் எல்லைகளில் சோதனைகளை துரிதப்படுத்தி இருக்கிறோம். கேரளாவில் இருந்து உடுமலை வரும் வாகனங்களில் கிருமி நாசினி தெளித்த பின்னரே அனுப்பி வைக்கப்படுகிறது. இதற்காக கால்நடைத்துறை சார்பில் 3 குழு அமைத்து 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.