தமிழகத்தில் LKG & UKG வகுப்புகளுக்கு 5000 சிறப்பாசிரியர்கள்? பள்ளிக்கல்வித்துறையில் புதிய அறிவிப்பு!
தமிழக அரசு பள்ளிகளில் உள்ள எல்கேஜி,யூகேஜி வகுப்புகளுக்கு 5,000 ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அதனால் தற்போது ஆசிரியர் கல்வி முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசிரியர் நியமனம்:
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில் கடந்த 2019ம் ஆண்டு மழலையர் வகுப்புகள் தொடங்கப்பட்டது. அரசு நடுநிலைப் பள்ளி வளாகங்களில் உள்ள 2,381 அங்கன்வாடிகளில் மழலையர் வகுப்புகள் தொடங்கபட்டது. இங்கு 3 – 4 வயது குழந்தைகள் எல்கேஜி வகுப்பிலும், 4-5 வயது குழந்தைகள் யுகேஜி வகுப்பிலும் சேர்க்கப்பட்டனர். இந்த எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் ஆங்கில வழி கற்றல் என்பதால் அரசு எதிர்பார்த்த அளவு மாணவர் சேர்க்கையும் அதிகரித்தது. தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் சுமார் 7 லட்சம் மாணவர்கள் புதிதாக சேர்ந்தனர்.
Exams Daily Mobile App Download
அதனால் ஆசிரியர்களின் தேவையும் அதிகரித்தது. இதனை சமாளிக்க தொடக்க பள்ளிகளில் இருந்து ஆசிரியர்கள் மாற்றப்பட்டனர். இந்த நிலையில் வரும் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் நடைபெறாது என்று தகவல்கள் வெளியானது. இது குறித்து விளக்கமளித்த பள்ளிக்கல்வித்துறை எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் ரத்து செய்யப்படவில்லை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தான் மாற்றப்பட்டுள்ளது என்று தெரிவித்தது. அதனால் பெற்றோர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள அங்கன்வாடி மையங்களில் குழந்தைங்களை சேர்த்துக் கொள்ளலாம் என்று தெரிவித்தது.
தமிழக கல்லூரிகளில் புதிய மாணவர் சேர்க்கை – உயர்கல்வித்துறையின் வழிகாட்டுதல்கள் வெளியீடு!
இந்த நிலையில் அரசு பள்ளிகளில் செயல்படும் எல்கேஜி, யூகேஜி வகுப்புகளுக்கு 5,000 சிறப்பாசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக முதற்கட்டமாக 2,500 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் D.TED (Teacher Training) கல்வி தகுதி பெற்ற பெண்களுக்கு பணியில் முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. அதனால் இனி வரும் ஆண்டில் D.TED முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே தமிழகத்தில் டெட் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.