தமிழக கல்லூரிகளில் புதிய மாணவர் சேர்க்கை – உயர்கல்வித்துறையின் வழிகாட்டுதல்கள் வெளியீடு!
தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிலை கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் புதிய மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டுதல்களை அறிவித்து உயர்கல்வித்துறை அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது.
மாணவர் சேர்க்கை
தமிழகத்தில் கடந்த மே மாதம் அறிவிக்கப்பட்ட அனைத்து பள்ளிகளுக்கான கோடை விடுமுறை முடிவடைந்து இந்த வாரம் திங்கள்கிழமை முதல் புதிய கல்வியாண்டுக்கான வகுப்புகள் மீண்டுமாக துவங்கி இருக்கிறது. இதற்கிடையில் நடப்பு கல்வியாண்டில் பள்ளிகள் செயல்படும் நேரம் உள்ளிட்டவற்றில் ஏகப்பட்ட மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்கள் சுமார் 2 ஆண்டுகள் கழித்து துவங்கியுள்ள நேரடி வகுப்புகளுக்கு உற்சாகமாக சென்று வருகின்றனர். இந்த சூழலில் தமிழகத்தில் கல்லூரி மாணவர்களுக்கும் செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்பட்டு, கோடை விடுமுறைகள் அளிக்கப்பட்டு வருகிறது.
Exams Daily Mobile App Download
இதனுடன் சேர்த்து புதிய கல்வியாண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை பணிகளும் அனைத்து அரசு மற்றும் தனியார் கல்லூரிகளிலும் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகள், சுயநிலை கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் ஆகியவற்றில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப் படிப்புகளில் புதிய மாணவர் சேர்க்கை பணிகளுக்கான வழிகாட்டுதல்களை உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
தமிழக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – போக்குவரத்துத் துறை அமைச்சர் முக்கிய உத்தரவு!
இது தொடர்பாக வெளியான அரசாணையில் தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும், சுயநிலை கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளில் புதிய மாணவர் சேர்க்கை வெளிப்படைத்தன்மையுடன் நடைபெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன் மாணவர்களுக்கான கல்வி கட்டணம் உள்ளிட்ட விவரங்களை கல்லூரிகள் வெளிப்படையாக தெரியப்படுத்த வேண்டும் என்றும் ஒவ்வொரு பாடப்பிரிவில் அரசு அறிவித்துள்ள இட ஒதுக்கீடுகள் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.