தமிழக அரசு சார்பில் ரூ.5000 வரை சம்பள உயர்வு – முதலமைச்சர் அறிவிப்பு!
தமிழகத்தில் நெல் கொள்முதல் செய்யும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குமாறு வைக்கப்பட்ட நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று இன்று தமிழக முதலமைச்சர் முக.ஸ்டலின் அவர்கள் ரூ.5 ஆயிரம் வரை ஊதிய உயர்வு அளித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
ஊதிய உயர்வு:
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சியை பிடித்துள்ளது. அவ்வாறு திமுக ஆட்சியை பிடித்ததில் இருந்து பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக மருத்துவத்துறை, கல்வித்துறை, இந்து அறநிலையத்துறை மற்றும் சுகாதாரத்துறை உள்ளிட்டவைகளில் சிறப்பாக செயலாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. அதே போல் பொதுமக்கள், அரசு ஊழியர்கள் மற்றும் விவசாயிகள் என அனைவருக்கும் பல்வேறு சிறந்த சலுகைகளை வழங்கி வருகிறது.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு – பணிகள் தீவிரம்! ஜன.3 முதல் விநியோகம்!
அந்த வகையில் தமிழகத்தில் உள்ள நெல் கொள்முதல் செய்யும் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்குமாறு தொழிற்சங்கங்கள் பல ஆண்டுகளாக அரசிடம் கோரிக்கை வைத்து வந்தனர். ஆனால் இதுவரை அவர்களது கோரிக்கை தமிழக அரசால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இந்நிலையில் தற்போது ஆட்சியை பிடித்துள்ள திமுக அரசு தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்று ஊதிய உயர்வு வழங்க முடிவு செய்துள்ளது. அதாவது நெல் கொள்முதல் செய்யும் பணக்காரர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க உள்ளதாக முதலமைச்சர் முக.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.
ரூ.70 ஆயிரம் சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்க ஜன.2ம் தேதி கடைசி நாள்!
அந்த வகையில் நெல் கொள்முதல் நிலையங்களில் பணிபுரியும் பணக்காரர்களுக்கு மாதம் ரூ.5,285 மற்றும் உதவியாளர்களுக்கு மாதம் ரூ.5,218 என்றும் ஊதியம் உயர்த்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் அகவிலைப்படியாக ரூ.3,499 சேர்த்து வழங்கிடவும் முலமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு தமிழகத்தில் நெல் கொள்முதல் செய்யும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கியது நெல் கொள்முதல் ஊழியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதனால் தமிழக முதலமைச்சருக்கு தொழிற்சங்கங்கள் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டு வருகிறது.