தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு – பணிகள் தீவிரம்! ஜன.3 முதல் விநியோகம்!
தமிழக்த்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பண்டிகை முன்னிட்டு பரிசுத்தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இந்த பொங்கல் தொகுப்பு மாவட்ட வாரியாக உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும் அனுப்பும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
ஜன.3 முதல் பொங்கல் தொகுப்பு:
தமிழகத்தில் கடந்த சில வருடங்களாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்கள் நலன் கருதி பொங்கல் வைக்க தேவையான பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்பு வழங்க தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த பொங்கல் தொகுப்பில் பொங்கல் வைக்க தேவையான பச்சரிசி, முந்திரி, திராட்சை, வெல்லம் முதலியவற்றுடன் சில மளிகை பொருட்கள் உட்பட 21 பொருட்கள் அடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ரூ.70 ஆயிரம் சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்க ஜன.2ம் தேதி கடைசி நாள்!
இத்தகைய பொங்கல் தொகுப்பானது தமிழகத்தில் உள்ள அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் வழங்கப்பட உள்ளது. இந்த பொங்கல் தொகுப்பில் முழு கரும்பும் இடம் பெற்றுள்ளது. இத்தகைய பொங்கல் தொகுப்பு மக்களுக்கு ஒரே நாளில் முழுமையாக சென்றடையும் வகையில் வழங்க வேண்டும் என்று ரேஷன் ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் எந்த பொருட்களும் இல்லை என்று குடும்ப அட்டைதாரர்களை திருப்பி அனுப்பக் கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளது.
தினசரி இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு உத்தரவு அமல் – JNU அறிவிப்பு!
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை இந்தாண்டு வரும் ஜன.14ம் தேதி கொண்டாடப்பட உள்ளதால் வரும் ஜன.3ம் தேதி முதல் பொங்கல் தொகுப்பு மக்களுக்கு விநியோகம் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனால் அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது கடலூர் மாவட்டத்தின் அனைத்து தாலுகாவிலும் உள்ள 1,424 ரேஷன் கடைகள் மூலம் 7 லட்சத்து 48 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் வந்த பிறகு வீடு வீடாக சென்று பொங்கல் தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன் விநியோகம் செய்யப்படும். எந்தெந்த நாளில் வந்து பொங்கல் தொகுப்பு வாங்கிக் கொள்ளுமாறு குறிப்பிடப்பட்ட நாளில் ரேஷன் கடைக்கு சென்று பொங்கல் தொகுப்பு பெற்றுக் கொள்ளலாம்.