தமிழக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ரூ.5000 பரிசுத்தொகை – தமிழ் வளர்ச்சித்துறை அறிவிப்பு!

0
தமிழக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ரூ.5000 பரிசுத்தொகை - தமிழ் வளர்ச்சித்துறை அறிவிப்பு!
தமிழக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ரூ.5000 பரிசுத்தொகை - தமிழ் வளர்ச்சித்துறை அறிவிப்பு!
தமிழக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ரூ.5000 பரிசுத்தொகை – தமிழ் வளர்ச்சித்துறை அறிவிப்பு!

சென்னையில் மகாத்மா காந்தி அவர்களின் பிறந்தநாள் அன்று பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி நடத்தப்படும் என்று தமிழ் வளர்ச்சித் துறை அறிவித்துள்ளது. மேலும் போட்டி நடைபெறும் இடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.

போட்டிகள் அறிவிப்பு:

இந்தியா சுதந்திரத்திற்காக அரும்பாடுபட்டவர்களுள் ஒருவர் தேசத்தந்தை காந்தியடிகள். போரில்லாமல் அகிம்சை முறையிலேயே சுதந்திரம் பெற்று தந்து அதிசயத்தை நிகழ்த்தியவர். இவரது பிறந்த தினமான அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினம் மகாத்மா காந்தியடிகளின் நற்செயல்களை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் காந்தி ஜெயந்தி அன்று பள்ளி, கல்லூரிகளில் விழா கொண்டாடப்படுகிறது. அந்த விழாவில் பேச்சுப் போட்டி, கட்டுரை போட்டி, ஓவியம் போன்ற பல போட்டிகள் நடைபெறும்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் இரட்டை போனஸ்? 7வது ஊதியக்குழு தகவல்!

இந்த ஆண்டு காந்தி ஜெயந்தி தினத்தன்று சென்னையில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தமிழ் வளர்ச்சித் துறை சார்பாக பேச்சுப்போட்டி நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான தலைப்புகள் போட்டி நடைபெறும் நாளன்று அறிவிக்கப்படும். இந்த போட்டியின் முடிவுகள் அறிவிக்கப்பட்டு பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பெறும். போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களை பள்ளி மற்றும் கல்லூரி முதல்வர்களே தேர்வு செய்ய வேண்டும்.

முதுநிலை நீட் தேர்வு 2021 முடிவுகள் வெளியீடு – தெரிந்து கொள்வது எப்படி?

தமிழ் வளர்ச்சித் துறை சார்பாக நடத்தப்படும் பேச்சு போட்டியில் முதலிடம் பெறும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பரிசுத் தொகையாக ரூ.5000, இரண்டாம் பரிசாக ரூ.3000, மூன்றாம் பரிசாக ரூ.2000 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. போட்டி 02.10.2021 அன்று காலை 10 மணிக்கு சென்னை தர்மமூர்த்தி ராவ் பகதூர் காலவள கண்ணன் செட்டி இந்து மேல்நிலைப் பள்ளி பெரம்பூர், தியாகராய நகர் – ராமகிருஷ்ண மடம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, மயிலாப்பூர் – குழந்தைகள் தோட்டம் மகளிர் மேல்நிலைப்பள்ளி, அம்பேத்கர் கலை கல்லூரி, பாரதி மகளிர் கலை கல்லூரி ஆகிய இடங்களில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!